<?xml version="1.0" encoding="utf-8" ?> 
		    <rss version="2.0"> 
			<channel> 
			    <title>வலைச்சரம்</title> 
				<link>http://www.valaicharam.com/</link> 
				<description></description><item>
			<title>கறை படிந்த வேட்டிகள்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link>
			<description><![CDATA[கட்சித் தலைமையின்காகிதச் செருகலில்தான் தோன்றித் தலைவனின் தனிப்பட்டகவனிப்பில் அரசியல் கொலைகளைஅரங்கேற்றி முடிக்கின்றனமுரட்டுக் கரை வேட்டிகள்இந்தத் தெருவில்இளைஞர் படுகொலைஅடுத்தத் தெருவில்பிரமுகர் படுகொலைகட்சி தான் வேறு அதன்கரை தான் வேறு ஆனால்வேட்டியின் நிறமோவெள்ளைதான்அதில் படும் கறையின்நிறமோ சிவப்புதான்]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 19:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>முப்பொழுதும் உன் கற்பனைகள் – மயிரே இல்லாத வழுக்கை</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88</link>
			<description><![CDATA[                                  அன்புள்ள வலைப்பூவிற்கு,ட்ரைலர் பார்த்தபோதே பாடாவதியான படம் என்று தெரிந்தபின்னும் இந்தப் படத்தை பார்க்க இரண்டு காரணங்கள் – ஒன்று “ஒருமுறை... ஒருமுறை...” பாடல், மற்றொன்று என் கன்னுக்குட்டி அமலா பால்.ஹீரோ வார நாட்களில் ஒரு மிகப்பெரிய ஐ.டி நிறுவனத்தில் அப்பாட்டாக்கர். வார இறுதியானால் பெங்களூரில் இருக்கும் தன் காதலி சாருவுடன் ஐக்கியமாகி விடுவார். ஹீரோவின் கம்பெனிக்கு புது CEOவாக வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்யப்பட்ட லதாவும் சாருவும் ஒரே சாயலில் இருக்கிறார்கள். லதாவுக்கும் ஹீரோவுடன் ஏற்கனவே பழகியது போன்றதொரு உணர்வு. ஒரு விபத்தில் ஹீரோ படுகாயம் அடைகிறார். அப்போது ஹீரோவின் ஆழ்மனதை கிளறிப்பார்க்க, சாரு, லதா, சாருலதா, சைக்கலாஜிக்கல்லி, பேசிக்கல்லி, கெமிக்கல்லி அதர்வாவும் அமலா பாலும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை.அதர்வா – அந்த ராம்ப் வாக் நடையழகும், சுந்தரத்தமிழ் வசன உச்சரிப்பும், ஆக்கக்க தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அஜித் குமார் தயார். அமலா பாலுடன் ரொமான்ஸ் செய்வதையும் சரி, அடிதடி ஆக்குசன் காட்சிகளையும் சரி, சத்தியமாக தாங்கிக்கொள்ள முடியவில்லை.அமலா பால் – Very Beautiful. அதர்வாவிற்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்து அடிக்கடி கடுப்பை கிளப்புகிறார். நடிப்பை பொறுத்தவரையில் பாஸ்மார்க் போடலாம். ஒரிஜினலாக வெட்கப்படுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ஒரு ஹீரோயினுக்கு இந்த அளவு நடிப்பே தாராளமானது.சந்தானம், நிறைய காட்சிகளில் சலிப்பூட்டுகிறார் சில காட்சிகளில் மட்டும் சிரிப்பூட்டுகிறார். ஜெயபிரகாஷை அமலா பால் “அங்கிள்... அங்கிள்...” என்று கூப்பிடுகிறார். அந்த வேலையை அவர் கரெக்டாக செய்திருக்கிறார். அதர்வாவின் அம்மாவாக அனுபமா குமார். பாவம்யா அவங்க ஹீரோயினா நடிக்க வந்தவங்க. அவங்களுக்கு போய், மொட்டையடிச்சு அழ வச்சு வேடிக்கை பாக்குது பாழாப்போன கோலிவுட். மகன் முதல்முறையாக நடந்துவரும்போது பெருமையும், ஆனந்தக்கண்ணீரும் கலந்த ஒரு பார்வை அவருடைய நடிப்பிற்கு சாம்பிள். நல்லவேளை அந்த ரோலுக்கு மொதல்ல சிம்ரனை கூப்பிட்டாங்களாம். அப்புறம் நாசர், நாலஞ்சு சைக்கோ வில்லன்கள் எல்லாம் இருக்காங்க.ஜிவி பிரகாஷ் இசையில் ஒருமுறை முதல்முறையே பச்சக். ஓ சுனந்தா பாடலும் க்ளைமாக்ஸ் அருகே வரும் ஒரு குத்துப்பாடலும் ஓகே ரகம். பின்னணி இசை படுரொமாண்டிக்.கலை இயக்குனர் கிரணைபாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக பெங்களூரு ஃபிளாட்டில் Interior Decorationல் அசத்தியிருக்கிறார். இயக்குனர் எல்ரெட் குமார், காதலுங்கறது மரணமே இல்லாத இடம், மயிரே இல்லாத தலை இந்தமாதிரி படுமொக்கையான வசனங்களை வைத்து இந்தக்காலத்து பசங்களை ஏமாற்ற முடியாது. Try to think practical. அம்மாக்கிட்ட சொல்லி காம்ப்ளான் வாங்கிக்குடிங்க பாஸ்.ஏகப்பட்ட தமிழ் சினிமா க்ளிஷேக்கள். ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை.Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்) எனக்கு படம் கொஞ்சம் பிடித்திருந்தது என்பது உண்மை. But when it come to others, இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம். அதையும் மீறி பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தீர்களானால், உங்களுக்கு வந்திருக்குற வியாதியின் பெயர் மொக்கையோபிலியா. அதாவது இந்த வியாதி வந்திருக்குறவங்க மொக்கை படங்களை தியேட்டர் தியேட்டரா தேடிப்போய் பார்ப்பாங்களாம். படம் பயங்கர மொக்கையாக இருந்தாலும் சூப்பரா இருக்குறதா அவங்களாகவே கற்பனை பண்ணிப்பாங்களாம்...!என்றும் அன்புடன்,N.R.PRABHAKARAN]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 18:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>நகைச்சுவை ஆப்கானிஸ்தானில் ஏன் தாலிகட்டுவதில்லை</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88</link>
			<description><![CDATA[யோகா பயிற்ச்சியாளர்: உங்கள் கணவன் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவரது குடிப்பழக்கத்தில் மாற்றம் உண்டா?அப்பாவிப் பெண்: ஆம் இப்போது தலைகீழாக நின்று கொண்டே தண்ணியடிக்கிறார்.நீ மட்டும்தான் என் காதலிஉன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்உன்னைவிட்டால் வேறொருத்தி எனக்கு வேண்டம்என எழுதி ஏழு பெண்களுக்கு காதலர் தின மடல் அனுப்பினேன்கணவன்: திருமணத்தின் முன்னர் யாரையாவது காதலித்தாயா?மனைவி: ...................கணவன்: ஏன் அமைதியாக இருக்கிறாய்? சொல்லப்பயப்படுகிறாயா?மனைவி: எதற்கும் எப்போது அவசரம்தான் உங்களுக்கு. என்னை கொஞ்சம் எண்ண விடுக்ங்களேன்!What is the longest word in the English language?&quot;Smiles&quot;. Because there is a mile between its first and last letters!விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கமுள்ள பெண். அதைத் தவிர்க்க யோகா பயிற்ச்சி  செய்தாள். இப்போது அவள் கால் நகங்களையும் விட்டு வைப்பதில்லை.கணவன் நினைப்பது: என் மனைவி என்மேல் மிகவும் அன்பாக இருக்கிறாள். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். அவள் ரெம்ப நல்லவள்மனைவி நினைப்பது: என் கணவன் என் மேல் மிகவும் அன்பாக இருக்கிறார். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். நான் நல்ல அழகி.First Sardar Ji: What are the fastest means of communication ?Second Sardar Ji: Telephone, Television, Tell-a-womanNeed still FASTER - Tell her NOT to tell ANY ONE.ஆப்கானிஸ்த்தானில் ஏன் தாலி கட்டுவதில்லை?அங்கு தாலி-பான் இருக்கிறது.]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 18:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF</link>
			<description><![CDATA[
கவிஞர் அ.ப.சிவா
தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
  மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 தலைவர்கள் அதிலும் நேர்கோட்டில் பயனித்த இருவரும் எதிர் திசையில் பயனித்த ஒருவருமாக மூவர் வழியே இம்முன்று காரணிகளை இவர்கள் கையாண்ட விதம் அதற்காண எதிர் வினை இவைகளை ஆராய்வோம்.
     உணவு பழக்க வழக்கம் என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை தம் உடல்நிலைக்கேற்ப உண்பதே எளிமை.இவ்விடயத்தில் காந்தி இங்கிலாந்து சென்றாலும் ஆட்டுப்பால் தான் குடிப்பாராம்.விமான பயணத்தில் இவருடன் ஆடும் பயணிக்கும். ‘பாய்‘ விட்டு திருமணத்திற்கு போனாலும் தயிர் சாதம் கேட்பாராம்.
    உடை விசயத்தை இங்கு குறிப்பிடவே வேண்டியதில்லை புத்தகத்தின் பின் அட்டையில் இந்திய அரசியலையே சொல்லிவிடுகிறார் மதி.
     பெரும் பணக்காரான தந்தை பெரியார் மிக எளிமையாக உடை அணிந்து வந்தார், ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநியாக இருந்த டாக்டர்.அம்பேத்கர் தன் உடையை எப்போதும் ஆதிக்க எதிர்ப்பு குறியீடாகவே காட்டியிருந்தார். ஆனால் இந்தியாவின் தந்தை என பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காந்தி ஆள் பாதி ஆடை பாதி என மாறிய நிகழ்வு அனைவரும் அறிந்ததே..
    தன் நாட்டு மக்களின் ஒருவர் மேல் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்தாராம் அன்று முதல் இவர் மேல் சட்டை அணியவே இல்லையாம், காந்தி மேல் சட்டை இல்லாமல் பார்த்தவர் ஒரு விவசாயி என குறிப்பிடுகிறார். வயலில் வேலை செய்யும் விவசாயி என்ன ரேமண்ட் சூட் போட்டுக்கொண்டா வேலை செய்வார். அதே காந்தி மதுரை தொடர் வண்டி நிலையத்தில் மலம் அள்ளி கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட தோழனை பார்க்கவில்லை போலும்.
     தன் நாட்டு மக்களுக்கு மேல் சட்டை இல்லை என்றால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களுக்கு சட்டை பெற்றுக்கொடுப்பவனே தலைவன், அதை விட்டு தன் சட்டையை கழற்றி போட்டு விட்டு திரிபவனா தலைவன் சிந்தியுங்கள்.
  அடுத்து இருப்பிடம், நள்ளிரவில் சுதந்திரம் என்ற புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி அவர்கள் சொல்வதாக ஒரு குறிப்பு இருக்கும் ,காந்தியின் எளிமைக்காக காங்கிரசு நிறைய செலவு செய்வதாக சொல்லியிருப்பார்.
  சேரியில் சென்று காந்தி தங்கியிருப்பாராம் அப்போது அவர் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பல வீடுகளில் காங்கிரசு தொண்டர்கள் தங்கியிருப்பார்களாம் காந்தியின் பாதுகாப்பிற்காய்.. சிந்தித்துப்பாருங்கள் காந்தியால் அச்சேரி மக்களுக்கு எவ்வளவு சிரமம். குடும்பம் நடத்தும் வீட்டில் வெளியாட்கள் வந்து தங்கியிருந்தால்(பெரும்பாலும் ஒரு அறையே வீடாக இருக்கும்) அவர்கள் நிலமை எவ்வளவு கடினம்.
  பொதுவாகவே நம் நாட்டில் இந்த எளிமை என்ற விசயத்தை பெரிதுபடுத்தியதற்கு காரணம் காந்தியே…
   ஆக உணவு உடை இருப்பிடம் இம்முன்று காரணிகளில் காந்தியின் எளிமை என்பது மக்களுக்கு துளியும் நன்மை பெயர்க்கவில்லை.
 காந்தி நண்பரா?துரோகியா? என்ற நூலில் தோழர்.வே.மதிமாறன் அவர்கள் காந்தியின் எழுத்துக்களிலிருந்தே அவரை தோலுரித்து காட்டியிருக்கிறார்.
  இந்திய வரலாற்றில் மக்களால் தவறாக புரிந்து கொண்டிருக்கிற அல்லது ஏற்றுக்கொண்டிருக்கிற சிலரை தோலுரிக்கிற வேலையை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கிறார் தோழர்.மதி.
   ஒரு சந்திப்பின் போது தோழர்.மதியிடம் நான் சொல்லியிருக்கிறேன். பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகம் வெளிவந்த போது எனக்கு சில மாற்று கருத்துக்கள் இருந்தது எனென்றால் பாரதி போன்றோரை எதிரியாக்குவதால் நமக்கென்ன நன்மை நம் அறிவின் விரிவை வெளிகாட்டத்தான் அது உதவும் என்ற எண்ணம் எனக்கிருந்தது, பின் காலப்போக்கில் அதன் நோக்கம் எனக்கு புரிந்தது.
  அப்புரிதலின் அடிப்படையில் காந்தியின் விசயத்துக்கு வருவோம், காந்தி ஒரு இந்து சனாதனவாதியால் கொல்லப்பட்டார்,  பார்ப்பானர்கள் அவர்களுக்கு எதிரானவர்களையே எப்போதும் அகற்றுவார்கள், ஆக அச்சமயத்தில் காந்தி பார்ப்பானர்களுக்கு எதிராக இருந்திருக்கிறார், தன் நிலையை காந்தி மாற்றியிருக்கிறார்.
  காந்தியின் அந்நிலை எப்படிப்பட்டது மதியின் மொழியிலேயே
பாருங்கள்:
  “இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரிக்கிற பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன்முனைப்பு அரசியலின் விளைவாவக அவரை அறியாமல் முளைத்த முற்போக்குக் கிளை அது’

ஆக அந்த முற்போக்கு கிளை காந்தி என்ற மரத்தை சாய்ப்பதற்கு காரணியாக அமைந்து விட்டது.
  ஒருவரின் பெருமையை நாம் பேசுவதற்கு எது அடிப்படையோ அதே அடிப்படையில் அவர்களின் குறைகளை அடையாளம் காண்பதற்க்கும், இப்புத்தகம் வெளி வந்தபோது எப்படி காந்தியை சிறுமைப்படுத்தியிருக்கிறார்கள் என பலர் வருத்தப்பட்டர்களாம்
அவர்களுக்கு என் பதில் இதுதான்…
 காந்தியை சிறுமைப்படுத்துவதல்ல இப்புத்தகத்தின் நோக்கம்.
அப்படி அவரை சிறுமைப்படுத்தியிருந்தாலும் எப்போதோ இறந்த ஒருவரை சிறுமைப்படுத்தி எந்த லாபமும் இல்லை.
  வரலாற்றை மக்களுக்கு விளக்குவதே அதன் நோக்கம்.
அப்படி விளக்குவதும் மக்களை எல்லாம் தெரிந்த அறிவாளியாக்க அல்ல, தவறானவர்களை பின்பற்றுவதால் ஏற்படும் இழப்புகளை புரியவைக்கவே, புரிய வைப்பதும் இன்னும் நீடிக்கும் இழப்புகளை மாற்ற முனையும் செயலாளியாக ஆக்கவே.
  இறுதியாக….
கார்ப்பரேட்களுக்கும்- காம்ரேட்களுக்கும் என்ன வித்தியாசம் ?
தன் வலியை ஊர் வலியாக மாற்ற நினைப்பவன் – கார்ப்பரேட்
ஊர் வலியை தன் வலியாக பார்ப்பவன் – காம்ரேட்
 படுக்கை வசதி டிக்கெட் எடுக்காமல் 5 க்ஷ்ல்லிங்கை மிச்சப்படுத்தலாம்( சிக்கனம் கூட இல்லை அலட்சியம் என்ற இந்திய குணம் அது தென் ஆப்பிரிக்காவில் நடக்கவில்லை)என்ற எண்ணத்தில் தன் தவறால் எற்பட்ட தன் வலியை (இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட) ஊர் வலியாய்(கருப்பர் இனப்பிரச்சனை) மாற்றிய காந்தி- கார்ப்பரேட்
 அவர் வழி வந்த யாராக இருந்தாலும் அவர்களும் கார்ப்பரேட்கள் தான் அதற்க்கு 2011-ல் நடந்த உண்ணாவிரதங்களே சாட்சி…
 தோழர். மதிமாறனின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலை படியுங்கள் விவாதியுங்கள் தெளிவு பெறுவேம்…..
***
அ.ப.சிவா
கட்டட பொறியாளர்(B.E)
கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், பெரியார் திராவிடர் கழகத் தோழர். டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சமீபத்தில் இவர் இயக்கிய ‘துக்கம்’ என்கிற குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
**
புத்தக வெளியீடு
‘அங்குசம்’
ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
தொடர்புடையது:
சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி
         ]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 17:00:05 MST</pubDate>
			</item><item>
			<title>கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF</link>
			<description><![CDATA[கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணிணி செயலிழக்கும் போதோ அல்லது கணிணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண் (Serial No) எங்கே என்று தெரியாமல் விழிப்பர். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.எளிமையான இந்த மென்பொருள் கணிணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம். பென் டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.தரவிறக்கச்சுட்டி: Download LicenseCrawler]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 17:00:05 MST</pubDate>
			</item><item>
			<title>கடந்த கால காதல்களை ஆய்வு செய்ய ஒரு இணைய‌தளம்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E2%80%8C%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D</link>
			<description><![CDATA[வாட் வென்ட் ராங் இணையதளம் போலவே இன்னொரு சுவாரஸ்யமான இணையதளம் உதயமாகியுள்ளது.இதுவும் காதல் சார்ந்த கருத்து சொல்லும் தளம் தான்.ஆனால் இந்த தளம் வில்லங்க‌மானதாகவும் தோன்றுகிறது. காரணம் ‘டர்டி பபுல்’ என்னும் அந்த தளம் கடந்த கால காதல‌ர்கள் பற்றிய கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.அதாவது எல்லோருமே தங்கள‌து டேட்டிங் அனுபவங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வாட் வென்ட் ராங் தளம் காதல் தோல்விக்கான காரணங்களை முன்னாள் காதலன் அல்லது காதலியிடம் கேட்டு … Continue reading »]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 17:00:05 MST</pubDate>
			</item><item>
			<title>காஞ்சி பயண கட்டுரை நிறைவு பகுதி</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF</link>
			<description><![CDATA[காஞ்சியின் மிக புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று வரதராஜ பெருமாள். சிவன் கோவில்கள் முழுக்க ஒரு பக்கம் இருக்க அதை சிவ காஞ்சி எனவும், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பிற விஷ்ணு கோயில்கள் வேறு பக்கம் இருக்க, அதை விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கிறார்கள். வரதராஜ பெருமாள் கோயிலில் சரியான கூட்டம். சில மணி நேரங்கள் நின்று தான் தரிசனம் பார்க்க வேண்டியிருந்தது. அப்போது எங்கள் அருகில் ஒரு பாட்டியும், ஒரு பத்து வயது சிறுமியும் நின்றிருந்தனர். மிக அழகாக எப்போதும் சிரித்தவாறே இருந்த அந்த பெண் ஒரு மாற்று திறனாளி. கால் போலியோவில் பாதிக்கப்பட்ட மாதிரி இருந்தது. பெயர் என்ன என கேட்க சிரித்தவாறே &quot; மதுர கவி&quot; என்றாள். செம புத்திசாலி. சென்னையி சேர்த்த இவள் பல முறை இந்த கோவில் வந்ததாக சொல்லி, எங்களுக்கு பல தகவல்கள் சொன்னாள். அவர் பாட்டி சிறிது நேரத்தில் கியூவில் நிற்காமல் &quot;அவளால் அதிக நேரம் நிற்க முடியாது&quot; என கோவில் நிர்வாகிகளிடம் சொல்லி அழைத்து சென்று விட்டார். அந்த சிறுமியின் சிரிப்பும் முகமும் இன்னும் கண்ணில் நிற்கிறது !இங்கு தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி மிகவும் விசேஷம். இதனை தொட்டு வணங்கினால் பல்லி மேலே விழுந்தால் வரும் தோஷம் வராது என்று நம்பிக்கை. ஏற்கனவே அன்று நிறைய கோயில்கள் சென்று விட்டதாலும் மிக மிக அதிக கூட்டம் இருந்தாலும் எங்கள் பெண் கியூவில் நிற்க முடியாது, கிளம்பலாம் என கூறி விட்டாள். இதனால் இந்த இடம் பார்க்காமல் கிளம்பினோம். இங்குள்ள குளத்தில் தண்ணீருக்கு உள்ளே ஒரு நாலு கால் மண்டபம் அமைத்து அதன் உள்ளே அத்திவரதர் சிலை உள்ளது. இந்த அத்தி வரதர் அறுபது வருடத்துக்கு ஒரு முறை தான் வெளியே வருவாராம் ! அப்படி வெளியே வரும் போது ஒரு மாதம் அவரை கோவிலில் வைத்திருப்பார்களாம். அந்த ஒரு மாதம் கூட்டம் குவியும் என்று சொல்கிறார்கள். என் மாமியார் தன் சிறு வயதில் அப்படி போய் அத்தி வரதரை பார்த்ததாக சொன்னார். கோயிலில் எடுத்த வீடியோ பாருங்கள்: ****இங்கு ஒரு கல் மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளே செல்ல தனியே &quot; இரண்டு ரூபாய்&quot; டிக்கட் வாங்குகிறார்கள். அழகான கல் சங்கிலி பார்த்து வியந்தோம். இந்த மண்டபத்தில் எடுத்த வீடியோ மற்றும் படங்கள் இதோ: டூரிஸ்டுகளுக்கு கைட் மாதிரி இருக்கும் பெரியவர் கல் மண்டபம் குறித்து விளக்குகிறார் கல் சங்கிலிகுளத்தில் ஒரு குடும்பம் (கணவன், மனைவி, இரு குழந்தைகள்) அமர்ந்து  பேசி கொண்டிருந்தனர். குளத்தில் ஏகப்பட்ட மீன்கள் ! அந்த தந்தை மீன்களை பிடிக்க முயற்சித்தார். முடிய வில்லை. அந்த வீடியோ பாருங்கள் கோயிலில் சாமி பார்க்க மேலே போகும் போது மிக குறுகலான படிகள். செங்குத்தான படிகள் முழுதும் கூட்டத்தை பாருங்கள் ﻿வரதராஜர் கோயில் பிரசாதங்கள் செம அருமை. புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் மிக அற்புதம். பொதுவாய் ஒன்று மட்டும் ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம். இங்கு ஆளுக்கு ஒன்று வாங்கி சாப்பிடும் அளவு அருமையாக இருந்தது. ***வரதராஜ பெருமாள் கோவில் அருகே தான் அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது. பார்க்க எண்ணினோம். மாலை ஐந்து மணிக்கு மூடி விடுவார்களாம. பார்க்க முடியலை ***காஞ்சி செல்ல எளிய வழிகள்:ரயிலில்: எனக்கு தெரிந்து இது தான் மிக எளிய மற்றும் செலவு குறைந்த வழி. சென்னை பீச்சில் இருந்து திருமால்பூருக்கு தினம் ஐந்து ரயில்கள் செல்கின்றன. அவற்றின் நேரம் (கிண்டியில்) இதோ: Guindy to Kanchipuram:7.30 AM10.0811.1118.2619.4420.45இவை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அது ஒன்று தான் குறை. ஆனால் கையில் நல்ல புத்தகம் அலது பேச்சு துணைக்கு நல்ல தோழமை இருந்தால் செல்லும் இரண்டு மணி நேரம் எளிதாக போய் விடும். காஞ்சிபுரம் ஸ்டேஷன் திருமால்பூருக்கு முந்தைய ஸ்டேஷன். இதே போல் திரும்ப வரும்போதும் காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் வந்து விடலாம். ரயில் நேரம் இதோ:Kanchipuram to Guindy:5.30 AM7.208.0510.3013.5517.25****ரோடு வழி சென்றால்: கார் அல்லது பஸ் எதுவாய் இருந்தாலும் : போரூர், ஸ்ரீ பெரும்புதூர் வழியே செல்வது தான் சுருக்கு வழி. தி. நகரில் இருந்து தினம் அரை மணி அல்லது ஒரு மணிக்கு ஒரு ஏ. சி பஸ் காஞ்சிபுரம் செல்கிறது. இது ஒன்னரை மணி நேரத்தில் காஞ்சி அடைகிறது டிக்கட் விலை ஒரு ஆளுக்கு ரூ. 150 போல் என அறிகிறேன். இதே ரயிலில் டிக்கட் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு ஆளுக்கு வெறும் 14 ரூபாய் தான் ! 14 ரூபாயில், எந்த சிரமும் இன்றி, அரட்டை அடித்தவாறு பயண களைப்பு தெரியாமல் செல்ல ரயிலே நல்ல வழி என நினைக்கிறேன் **காஞ்சிபுரம் பயணம் நாங்கள் எதிர் பார்த்ததை விட மிக அருமையாக  இருந்தது. இன்னும் ஒரு முறையாவது காஞ்சி சென்று பார்க்க தவறிய இடங்களை பார்க்கும் ஆவல் உள்ளது. ***இந்த தொடரை தொடர்ந்து வாசித்த தங்கள் அனைவருக்கும் நன்றி !***டிஸ்கி: எனது அம்மா உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு தஞ்சையில் மருத்துவ மனையில் உள்ளார். பிழைப்பது மிக சிரமமே. ஒரு வாரமாக தஞ்சைக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இருந்தால் அந்த நல்ல ஆத்மா சிரம படாமல் மரணத்தை தழுவ வேண்டி கொள்ளுங்கள். இதனால் இணையம் பக்கம் வருவதும், பதிவுகளும் அடுத்த ஓரிரு வாரத்துக்கு என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் பின்னூட்டங்களை நான் உடனே பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு உடனே பதில் தர முடியாது மன்னிக்கவும்!   தங்கள் புரிதலுக்கு நன்றி !]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 17:00:05 MST</pubDate>
			</item><item>
			<title>வாங்க நாட்டுக்கோழி சாப்பிடலாம்...</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...</link>
			<description><![CDATA[ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    
பின்னர் இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
    
மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.Powered By WizardRSS.com | Full Text RSS Feed | Amazon Affiliate | Android Games | Wordpress Tutorials]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>அஞ்சறைப்பெட்டி 16022012</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+16022012</link>
			<description><![CDATA[ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக நேரம் உறங்குவதால், அவர்களுக்கு  பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு  ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பெண்களின் தூக்கத்திற்கும் நோய்  பாதிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து வடக்கு கரோலினா பொதுசுகாதார  பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் 7 மணி  நேரத்திற்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள்  அதிகம் என்று தெரியவந்துள்ளது.
சராசரி 7 மணிநேர உறக்கம்
50  முதல் 79 வயதுவரை உடைய 93,676 வயதான பெண்மணிகளிடம் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது 1994 முதல் 2005 வரை நாடுமுழுவதும் 40 மருத்துவனைகளில்  அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில்  37.5 சதவிகித பெண்கள் சராசரியக 7 மணிநேரம் உறங்குவதாக தெரிவித்தனர். 26.9  சதவிகித பெண்கள் 6 மணிநேரமும், 8.3 சதவிகித பெண்கள் 5 மணிநேரத்திற்கும்  குறைவாக உறங்குவதாக தெரிவித்தனர். மேலும் 22.7 சதவிகிதம் பேர் 8 மணிநேரம்  உறங்குவதாகவும், 4.6 சதவிகிதம் பேர் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக  உறங்குவதாகவும் கூறியுள்ளனர்.
பக்கவாத நோய் பாதிப்பு
இவர்கள்  உறங்கும் நேர அளவைப் பொருத்து பக்கவாத நோய் பாதிப்பு கணக்கிடப்பட்டது. 7  மணிநேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக  இருந்தது. 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம்  பாதிப்பு ஏற்படுவது 14 சதவிகிதமாக இருந்தது. அதேசமயம் 9 மணி நேரம்  உறங்குபவர்களுக்கு பக்கவாதநோய் பாதிப்பு 70 சதவிகிதமாக இருந்தது  தெரியவந்தது. எனவே குறைவாக உறங்குபவர்களை விட அதிக நேரம் உறங்குபவர்களுக்கு  பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள்  கூறியுள்ளனர்.
ரத்தம் உறைந்து விடும்
50  வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ  அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த  நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில்  தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் தங்களின்  ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தூக்கம்  கெட்டாலும் நோய் வரும், அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து சராசரியாக 7  மணிநேரம் உறங்குவதே ஏற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Powered By WizardRSS.com | Full Text RSS Feed | Amazon Affiliate | Android Games | Wordpress Tutorials]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81...+-+%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE</link>
			<description><![CDATA[சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா.இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன.எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.கடைசி முயற்சியாக, &#039;சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்&#039; என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.சசிகலா தந்த பதில்களை ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ்.கதறி அழுத சசிபல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம்.வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.(நன்றி தட்ஸ்தமிழ்)]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>Tamils should  Give the Middle Finger to America and  World like  M.I.A. middle finger at Super Bowl</title>
			<link>http://www.valaicharam.com/news/Tamils+should++Give+the+Middle+Finger+to+America+and++World+like++M.I.A.+middle+finger+at+Super+Bowl</link>
			<description><![CDATA[
Video-

London evening Standard had always taken a anti Tamil stand and supported the killing of 40,000 Tamil civilians by the racist sinhalese government.
 London evening Standard , a London based news paper , is one of the media who kept mostly silent about the genocide of Tamils during 2009 which many would have noticed. The paper usually bring highlight of the world issues to Londoners , has once again shown its wrong message when it wrote an article about MIA , who performed in the Super Bowl Show on Page 13 while weeps about killings in Syria on other pages.
The free circulated paper  usually reaches thousands of Londoners in the city , has been successfully brought the killing in Libya with highlighted news and now it is bringing the news from Syria. It also highlights many world issues including Middle East up rise while since it has given a wrong picture of Sri Lankan genocide.
MIA is a Tamil , who fled the war and honest artist who could not keep silent when 40,000 Tamils were bombed and massacred. Many world leaders and organisations also voiced for Tamils during this massive massacre during 2009 and it is not a surprise that MIA talked against state terrorism of Sri Lanka. Now Evening Standard describes MIA and be accused of supporting terrorism on single page while she only raised the voice against Sri Lankan regime who upstaged the genocide with the help from China and Russia. It same happening in Syria and will Evening Standard says same if somebody raises voice against Syria?
As a most read paper in London, Evening Standard has failed to bring in the news from Tamil homeland during the Genocide while it has shown huge interest in the Middle East up rise and killing of Gaddafi. The news which showed what happened in Libya and Syria has created huge awareness in the minds of Londoners thus many did not even worry when Gadaffi was dead. It should be appreciated that Evening Standard did a good job in bringing such news.  It is surprising when the paper highlights the news of Syria with 5000 casualties while it kept mostly silent when 40,000 Tamils were killed.
Even though world nations ignored the case, due to no economical or political benefits for countries in Sri Lanka, a true media , Evening Standard should have followed ethical journalism on Sri Lankan war crimes . The paper should bring the truth of Tamil genocide and support the people when they raise their voice. M.I.A  good job was welcomed by world wide Human right bodies and Tamils which will normally be praised by a good journalist. Since Tamils do not have a government or huge funds to do a media campaign they rely on their artists to bring awareness to world.
The act of Evening Standard should be condemned for such double standard by suppressing Sri Lankan genocide while talking about Syria.
If Evening Standard believes that talking about Sri Lankan genocide is supporting terrorism, will it be pointing its figure on British MPs and ministers for saying same?  Bullying an artists since she is from ethnic minority in London is not acceptable and such a
All Tamils and Human Right activist need to unite and show their support to M.I.A and condemn the wrong impression Evening Standard tries to bring into the minds of Londoners.
By : Justice for Tamils ]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>ஈழப் பாடகி மீயா அமெரிக்காவுக்கும் உலகிற்கும் நடுவிரலைக் காட்டியது சரி  காணொளி</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF</link>
			<description><![CDATA[உலக வல்லரசுகளின் அனுசரனையோடு தமிழினம் அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த உலகிற்கு நடு விரலைக் காட்டிய இந்த தமிழ் பெண்ணுக்கு எமது நன்றிகள்
மாதங்கி மாயா அருள்பிரகாசம், மியா (M.I.A) எனும் பெயரில் அமெரிக்காவில் பொப் இசைப் பாடகியாக வலம்வருகின்றார். இவர் அமெரிக்காவின் Indianapolis இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Super Bowl XLVI போட்டியின் இடைவேளையில் நடைபெற்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற பாடகி மடோனாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இந் நேரடி ஒலிபரப்பினை உலகளாவிய ரீதியில் சுமார் 150 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஆனால் நடன நேரத்தில் அவர் பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தும் வகையில் காட்டப்படும் நடு விரலைக் காட்டி நடனமாடினார் என்ற சர்ச்சைக்குள் தற்போது சிக்கியுள்ளார். இவரின் இச்செயலுக்காக பிரபல அமெரிக்க தொலைக்காட்ச்சி நிறுவமனான என்.பி.சி, என்.எல்.எப் போன்றவை மன்னிப்புக்கோர நேரிட்டுள்ளது.
சிறுவர்களும் சிறுமியர்களும் கண்டுகழிக்கும் இந்த விளையாட்டுப் போட்டி பாடல் நிகழ்வில் இவர் இவ்வாறு நடந்துகொண்டது பெரும் தவறு என்று அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளது.
ஆனால் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி மடோனா அவர்கள் ஒரு முறை மேடை நிகழ்வு ஒன்றில் தனது மேலாடையைக் களைந்து பாடி, பின்னர் பொலிசாரிடம் கைதானார். மாயாவின் இச் செயல் பெரிய பாரதூரமான குற்றச் செயல் எனத் தெரிவிப்பதுடன் இவர் இக்குற்றத்துக்காக தண்டனை செலுத்தவேண்டிவரலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.

Tamils should Give the Middle Finger to America and World like M.I.A. middle finger at Super Bowl
Video- London evening Standard had always taken a anti Tamil stand and supported the killing of 40,000 Tamil civilians by the racist sinhalese government.  London evening Standard More…

Why MIA Was Right to Give America the Finger at the Super Bowl

The Sri Lankan-British performer gave us all the finger at the Superbowl. Maybe we deserved it. As Nipplegate instructed us, the Superbowl halftime stage is seen in America More…]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>Why MIA Was Right to Give America the Finger at the Super Bowl</title>
			<link>http://www.valaicharam.com/news/Why+MIA+Was+Right+to+Give+America+the+Finger+at+the+Super+Bowl</link>
			<description><![CDATA[The Sri Lankan-British performer gave us all the finger at the Superbowl. Maybe we deserved it.

As Nipplegate instructed us, the Superbowl halftime stage is seen in America as almost hallowed ground, a football altar where only our most sacred pop stars may tread. And if they desecrate it? They will be effectively excommunicated, even if their legacy in American music is as important as anyone’s.
When Justin Timberlake accidentally exposed Janet Jackson’s breast in 2004 (and promptly recused himself from blame or controversy, leaving her to deal with it on her own), she became the country’s pariah, a heretic whose long punishment only ended in November 2011, when the Third Circuit Court of Appeals ruled that the FCC must pay back a fine it collected from CBS for the incident.
So for a young, rebellious pop starlet, the Superbowl halftime stage is the perfect place to drum up controversy. And controversy is what followed when the singer-rapper-artist M.I.A., during her guest verse on Madonna’s new single “Give Me All Your Lovin’,” looked into the camera and flipped the bird to 111.3 million viewers, while rapping the line, “Imma say this once/yeah/I don’t give a shit.” As a gesture, it certainly matched the sentiment of the line—but where the halftime censors were armed and ready to blank out the “shit” in her rap, they lagged on blurring out her middle finger, and so America got a huge dose of brown-girl disdain in the form of a beautifully rounded manicure and a traditional South Asian wedding bracelet.
As “obscene” gestures go, M.I.A.’s middle finger was no more shocking than, say, Usher’s pelvic thrusts during last year’s performance with the Black-Eyed Peas. Of course Madonna was reportedly “furious,” presumably because she “prides herself on professionalism,” but more likely because the act ciphoned the attention from the formerly boundary-bucking star. Madonna also called the M.I.A. finger “stupid and childish,” which, Madonna: you’ve made out with girls on television solely for attention, so you’re gonna have to sit down.
But Madonna’s reaction is less about attention and professionalism, and more about her ability to control her collaborators—which might illuminate why M.I.A. did it in the first place. When news first leaked that Madonna would be collaborating with M.I.A. and beloved rapper Nicki Minaj, fans were ecstatic—not just because the queen of pop was recognizing a new, innovative generation, but because Minaj and M.I.A., arguably the two most important young women in hip-hop and the surrounding world, would finally come together. But last week, when the video for the resulting song, “Give Me All Your Luvin’,” emerged, the overwhelming response was disappointment. First, the song itself is bland and soulless, with Madonna singing bad lyrics that don’t even make sense in a nonsensical pop sense. (Some also think it’s a mediocre ripoff of “Love Banana” by the Rio-based tropical bass producer Joao Brasil and CSS singer Lovefoxx, both of whom M.I.A. is certainly aware of.)
Perhaps more offensive than a ripoff, though, was the way Madonna underutilized Minaj and M.I.A. Both pop stars in their own right, she gives them each a token eight bars to knock out a super-quick rap and attempt to encapsulate their formidable personalities. It sounds wedged in, as though Madonna does not really care about their music so much as the cool cred they might garner her from the underground and younger audiences. Couple that with the fact that she positions them as her cheerleaders—both in the context of the song’s chorus, and dressed up as such in the official video and on the Superbowl performance—and it feels like the kind of familiar act of tokenism that Madonna has practiced since the 1990s.
http://www.alternet.org/culture
 

Tamils should Give the Middle Finger to America and World like M.I.A. middle finger at Super Bowl

 ]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்  வீரவணக்கம்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</link>
			<description><![CDATA[
“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
வான்கரும்புலிகளின் பாடல்

வான்கரும்புலிகளின் தாக்குதல் காணொளி

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

வான்புலிகள்

“தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!
மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.
‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.
எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.
மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!
நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.
மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.
வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.
விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.
அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!
உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.
எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.
அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.
அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.
அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?
உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.
அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
அன்புக்குரிய மக்களே!
எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?
யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.
அன்புக்குரிய மக்களே!
எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.
அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள் இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.
சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.
அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.
நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.
அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!
போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.
உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.
ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.
சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?
அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’
‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.
எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.
வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.
பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?
நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.
அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.
இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.
அன்புக்குரிய மக்களே!
சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.
எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.



]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>இந்தியா குறித்த அச்சுறுத்தலும் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும் – 04</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+04</link>
			<description><![CDATA[எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரில் இந்தியா குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வரும் நிர்ப்பந்தத்திற்குத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
‘குட்டக் குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ என்ற சொல்லாடல் தமிழில் பிரசித்தமானது. அது யாருக்குப் பொருந்துகின்றதோ, இல்லையோ… இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிச்சயம் பொருந்தி வருகின்றது.
எம்மில் இப்போதும் சிலர் எம்மைக் குட்டுவது இந்தியாவின் உரிமை என்பதாகவும், அதனைப் பொறுத்துப் போவது ஈழத் தமிழர்களது கடமை என்ற கருத்தியலுக்குள் புதைத்துவிட முயல்கின்றார்கள். இந்தியாவின் கொடூர முகத்தினை முதன்முதலில், உயிராயுதம் கொண்டு கிளித்துப் போட்டவர் திலீபன். இந்தியக் கொடூரங்களை ஆயுதம் ஏந்தி எதிர்த்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். முள்ளிவாய்க்காலின் பின்னர், இப்போதும் சிலர் எம்மைக் குட்டுவது இந்தியாவின் உரிமை என்றும், அதனைப் பொறுத்துப் போவது எமது கடமை என்றும் தலித்துவ சிந்தனைக்குள் ஈழத் தமிழர்களைச் சிறைப்படுத்த முயல்கின்றார்கள்.
இந்தியாவை உறவாக, உயிராக, துணையாக எண்ணிய ஈழத் தமிழர்கள் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கம் கொடியது, கொடூரமானது. அத்தனை வலிகளையும் தாண்டி இன்றுவரை இந்தியாவை வெறுத்து ஒதுக்க முடியாத சங்கடமான நிலைக்கு, தமிழகத்து உறவுகள் இன்றும் காரணமாக உள்ளார்கள். அதைத் தாய்த் தமிழகமும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான், ஈழத் தமிழர்களுக்கான போர்க் குரலின் ஊடாக, இந்திய நடுவண் அரசு மீதான குற்றச்சாட்டுக்களும், அறம் பாடல்களும் தமிழகத்தில் பெருகி வருகின்றன.
ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் அணுகுமுறை மட்டுமல்ல, தமிழக நலன் சார்ந்த இந்திய நடுவண் அரசின் போக்குக்களும் தமிழகத்தில் கொந்தளிப்புக்களைப் பெருக்கி வருகின்றது. பொறிகள் எப்போதுமே பொறிகளாகவே இருந்துவிடப் போவதில்லை. அது தீப்பந்தங்களாக மாறும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதையே இந்தியாவின் தமிழர் விரோத நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தம்மை எரித்துக் கொண்டவர்கள் தொடர்ந்தும் அப்படியே எரிந்து போவார்கள் என முடிவு செய்துவிட முடியாது. தம்மை எரிக்கத் துணிந்தவர்கள், தமக்கு முன்னால் எக்களமிடும் பகையை எரிக்க முடிவு செய்துவிட்டால், தமிழகமும் ஒருநாள் போர்க் களமாகிவிடும்.
எனவே, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல்களுக்கு இந்தியா இந்த அவையிலும் தனது கறுப்பு முகத்தைக் காட்டுமாக இருந்தால், அது ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் இந்தியாவுக்கு எதிராகப் பொங்கி எழ வைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அது, தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஈழத் தமிழர்களது உயிருடனும், வாழும் உரிமையுடனும் தொடர்ந்தும் இந்தியா விளையாடுமாக இருந்தால், ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழினம் அனைத்தும் இந்தியாவுக்கு வெளியே உறவினைத் தேடுவதற்கும், அதன் மூலம் தங்களது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்குமான நிலமை உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
தற்போதைய யதார்த்தத்தை இந்தியா ஊடாகவே பார்க்க முயல்பவர்களுக்கு, இன்னொரு யதார்த்தத்தையும் நாங்கள் புரிய வைக்கவேண்டும். பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக்கான களமாக உருவாகியுள்ள இலங்கைத் தீவில் சீனாவின் நலன்கள் தோற்கடிக்கப்பட்டால், சீனா மாற்று வழிகளை நாடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். அத்தகைய சந்தர்ப்பத்திலும் ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான யதார்த்தத்தைக் காண முடியும்.
மேற்குலகில் பெருகிவரும் புலம்பெயர் தமிழர்களது அரசியல், பொருளாதார பலம் இன்னொரு வகையான யதார்த்தத்தை உருவாக்கப் போகின்றது. கனடாவின் நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்துள்ள ஈழத் தமிழர்களது அரசியல் செல்வாக்கு, இனி வரும் காலத்தில் பல நாடுகளிலும் பெருகிச் செல்லப் போகின்றது. அது ஈழத் தமிழர்களுக்கான குரலாக ஒலிக்கத் தொடங்கும்போது மேற்குலகின் யாதார்த்தம் வேறு ஒன்றாகவும் இருக்கப் போகின்றது.
எனவே, இந்தியப் பெரும் பூதத்தைக் காட்டி ஈழத் தமிழனத்துக்கு அச்சச் சோறூட்டும் அசிங்க நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். யதார்த்தம் என்ற ஒற்றைச் சொல்லினூடாக ஈழத் தமிழர்களது எதிர்காலத்தை ஒட்டு மொத்தமாகக் குழி தோண்டிப் புதைப்பதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்தியா இந்தியாவாகவும், தமிழீழம் தமிழீழமாகவும் நிலை பெற வேண்டுமாயின் நாங்கள் ஒற்றை யதார்த்தத்திற்குப் பலியாகிப் போய்விட முடியாது. ஈழத் தமிழினத்தின் இத்தனை இன்னல்களுக்கும், இழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் நாங்கள் தேர்ந்தெடுத்த பிழையான யதார்த்தமே காரணமாக இருந்துள்ளது.
இந்தியாவின் வஞ்சக அரசியலுக்குள் தமிழினம் தங்களைத் தொலைத்துவிட முடியாது. எதிர்வரும் ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்தால், தமிழினம் இந்தியா குறித்த இறுதி முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கப்படும்.
இதனை எச்சரிக்கையாக அல்லாமல், ஈழத் தமிழர்களது இறுதிக் கோரிக்கையாக இந்தியா புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
தொடரும்…
- சிவகுரு பாலச்சந்திரன்
மக்கள் பிரதிநிதி – பாரிஸ்
 

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! – 03
இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! – 02
இந்தியா குறித்த அச்சுறுத்தலும் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்—- 01
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>இந்தியா குறித்த அச்சுறுத்தலும் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும் – 03</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+03</link>
			<description><![CDATA[உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன.
கிழக்கு – மேற்காக ஜெர்மன் நாட்டைப் பிரித்து வைத்திருந்த சுவர் தகர்க்கப்பட்டதும், இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியன் உதிர்ந்து போனதும், சாத்தியமே இல்லாத ஒரு மக்கள் புரட்சி துனீசியாவின் அரசியலைப் புரட்டிப் போட்டதும், அதன் நீட்சியாக லிபியாவின் இரும்பு மனிதன் கடாபி இல்லாமல் போனதும் உலகில் மாறிவரும் யதார்த்தங்களை எமக்குப் புரிய வைக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், இந்தியாவைத் தாண்டி எந்த மாற்றமும் ஈழத்தில் சாத்தியம் இல்லை என்று கயிறு திரிப்பவர்கள் இந்தியாவிடமிருந்தே அந்த யாதார்த்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம்.
எண்பதுகள்வரை தன் பிடியில் நில்லாமல் நழுவிய சிங்கள தேசத்திற்குப் பாடம் புகட்டுவதற்காக இந்தியா மேற்கொண்ட நகர்விற்கு ஈழத் தமிழர்களது அரசியல் பலிப் பொருளாக ஆக்கப்பட்டது. தமிழீழம் சாத்தியமே இல்லை என்று தத்துவம் பேசும் இந்தியா, அந்த நாட்களில் ஈழத் தமிழர்கள் கைகளில் ஆயுதங்களை எதற்காக அள்ளிக் கொடுத்தது? தனது மண்ணில் வைத்து ஆயுதப் பயிற்சிகளை எதற்காக வழங்கியது? அப்போதெல்லாம் இந்தியா போட்ட கணக்கு என்ன? அது செய்ய நினைத்தது என்ன? என்பதை நாங்கள் முற்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள ஆட்சியாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்தியா பலி கொண்ட ஈழத் தமிழர்களது உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ‘இந்தியாவின் போரை நாங்கள் நடாத்தினோம்’ என்ற சிங்கள ஆட்சியாளர்களது வாக்குமூலத்தை இந்தியா மறுதலிக்காத யதார்த்தத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள தேசத்துடனான போரை ஈழத் தமிழர்களுடாக மேற்கொண்ட இந்தியா, பின்னர் யதார்த்த மாற்றத்துடன் ஈழத் தமிழர்கள் மீதான போரை சிங்களப் படைகளூடாக நடாத்தி நிறைவு செய்தது. முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்கான நீதி கோரிய தமிழினத்தின் ஆவேசக் குரல்களும், அதனூடான உலக மாற்றங்களும் சர்வதேச அவைகளில் அடங்கிப்போகச் செய்யும் அசிங்கத்தையும் இந்தியாவே முன்நின்று நிகழ்த்தியதை இந்தியாவுடன் சமரசம் செய்ய முற்படுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நல்லவனது பகையிலும் பார்க்க. கெட்டவனின் நட்பு பேரழிவை ஏற்படுத்தும் என்பது இந்தியா எமக்குக் கற்றுத்தந்த பாடம். நாங்கள் இந்தியாவை நேசித்தோம், இந்தியாவின் பகை நாடு என்பதால் சீனாவை வெறுத்தோம். நாங்கள் இந்திவை சுவாசித்தோம், இந்தியாவுடன் வன்மம் பாராட்டியதால் பாகிஸ்தானை உதாசீனம் செய்தோம். அதுவே எங்களுக்கு வினையாக வந்தது. சீனாவும், பாகிஸ்தானும் ஈழத் தமிழர்கள்மீது கருணை காட்டாததற்கு நாங்களே காரணமானோம்.
1971 இல் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்காள தேசத்தை விடுவிப்பதற்கான போரை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்தியா அமெரிக்கா உட்பட்ட அத்தனை நாடுகளிடமும் ஆதரவு கோரியது. 2012 இல் ஈழத் தமிழர்களுக்கான நீதிப் போராட்டத்திற்கு அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு இந்தியாவிடம் ஆதரவு கோரி தூது செல்கின்றன. இதில், யதார்த்தம் எங்கே உள்ளது? ஈழத் தமிழினம் அழிக்கப்பட்ட காலத்திலும், அவலப்பட்ட காலத்திலும், அதன் பின்னரான கொடூரமான அடக்குமுறை காலத்திலும் ஈழத் தமிழர்களுக்காகப் பேசச் செல்வதாக சிங்கள தேசம் சென்ற கிருஷ்ணா வரையிலான அத்தனை இந்திய அதிகார சக்திகளும் சிங்கள ஆட்சியாளர்களுடன் தமக்கான பேரம் பேசலிலும், ஒப்பந்தங்கள் செய்வதிலும் மட்டுமே சிரத்தை எடுத்த வரலாற்றை எந்த யதார்த்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?
ஈழத் தமிழர்களுக்கான நீதிப் போராட்டத்திற்காவது இந்தியா கருணை காட்டுமாக இருந்தால், ஐ.நா. மன்றத்தில் எத்தனை நாடுகள் சிறிலங்காவின் இன அழிப்பு யுத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போகின்றது? நாங்கள் வீழ்ந்தபோது, எங்களைத் தூக்கிவிடவில்லை. நாங்கள் மடிந்தபோது, எங்களைக் காப்பாற்ற வரவில்லை. நாங்கள் அவலப்பட்டபோது, எங்களுக்கு ஆறுதல் கூறவும் வரவில்லை. இனி எப்போது வரும் என்று இந்திய தாசர்கள் கற்பிதம் கூறுகின்றார்கள்?
நாங்கள் எழவேண்டும். எங்கள் சொந்தக் கரங்களை ஊன்றி நாங்கள் எழவேண்டும். எங்கள் பலத்தில் நாங்கள் நிமிர வேண்டும். சிங்கள தேசம் எப்படி இந்தியாவைக் கொண்டே ஈழத் தமிழர்களை அழித்து நிமிர்ந்ததோ, அது போலவே நாங்கள் எங்கள் எதிரியை வீழ்த்தும் வியூகத்தை மேற்கொள்ள வேண்டும். இனி வரும் போர்க் களத்தில் நண்பர்கள் எதிரிகளாக மாறலாம், எதிரிகள் நண்பர்களாகவும் மாறலாம். ஆனாலும், நாங்கள் யாருக்கும் தலைசாய்த்து நிற்கப் போவதில்லை. ஏனென்றால், நாங்கள் பிரபாகரன் காலத்துத் தமிழர்கள்!

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! – 02
இந்தியா குறித்த அச்சுறுத்தலும் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும் 01
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>தாயத்தில் தமிழ் மீது ஆக்கிரமிப்பு போர் புலத்தில் தமிழ் மெல்லச் சாகிறது</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81</link>
			<description><![CDATA[தமிழ் மொழி இனம் சார்ந்தது. இனத்தின் அடையாளம். வாழ்வியல் நெறி. செம்மொழி அந்தஸ்த்தை உடைய மூத்த மொழி. இப்படி தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும், தகைமையும், கனதியும் நீண்டிருக்கிறது.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட எமது மொழி மெல்ல இனிச் சாகும் என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற நிலையை உணரும்போது நெஞ்சம் தீயாய்த் தகிக்கிறது.
ஒரு இனத்தை தனித்து யுத்தத்தால் மட்டும் அழித்துவிட முடியாது. அந்த இனத்தினுடைய மொழி மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தி அதனை சிதைக்கின்ற போது தான் குறித்த இனத்தினுடைய கலை, கலாசாரம், விழுமியங்கள் உள்ளிட்ட மொத்த அழிவு சாத்தியமாகின்றது. இன்று இந்த சம்பவம் எமது தாய் மண்ணில் நடந்தேறி வருகிறது. மாறாக புலம்பெயர் தேசங்களில் தமிழ் மறக்கப்படுகிறது அல்லது விலக்கப்படுகிறது.
யுத்தத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் மீது சிங்கள அரசால் ஒரு மொழி ஆக்கிரமிப்புப் போர் நூதனமாய்க் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தரப்படுத்தல், மண்பறிப்பு, மற்றும் மொழி உரிமை மறுப்புக்காக எழுந்த விடுதலை உணர்வை குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்கள அரசால் அனைத்து மக்களுக்குமான மும்மொழித் திட்டம் தயார்ப்படுத்தப்பட்டு ஆரம்ப நிகழ்வு நடாத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தியாவின் முன்நாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழர்களுடைய பிணங்களுக்கும் கபாலங்களுக்கும் நடுவில் சாட்சிப் பொருளாகியிருக்கிறார்.
தமிழர் தாயகப் பிரதேசத்தை நோக்கி புத்தம் முன்னே செல்ல சிங்கள மொழி பின்னே செல்கிறது. தெருக்களில் தொடங்கி பாடசாலைகளில் ஒலிக்கப்படுகின்ற தேசியகீதம் வரை சிங்கள மொழி வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழ் பிரதேச நிர்வாக நடைமுறைகளை நிர்வகிப்பதற்கு தமிழ் மொழி தெரியாத சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அரசு சிங்கள துணைவேந்தரை நியமித்திருக்கிறது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த நியமனம் ரத்துச்செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பிரதம, கௌரவ விருந்தினர்களை அழைப்பதாயின் யாழ் கட்டளைத் தளபதியிடம் அனுமதி பெறவேண்டுமாம்? அதே வேளை தானே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென சில பிரபல பாடசாலைகளிடம் கேட்டிருக்கிறார். இப்போது யாழ்ப்பாண அரச அதிபர் நியமனத்துக்கு சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இனசமத்துவம் என்ற பெயரில் ஆமி – புலி திருமணம் மூலம் இனக்கலப்பு செய்து வைக்கிறது. இப்படி தமிழர்கள் தாயகப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் தொடர்கிறது.
முன்னதாக தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழ்ந்த நீhகொழும்பு பிரதேசம் தற்போது சிங்கள மயமாகிவிட்டது. அங்கிருந்த தமிழ் பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. அங்கு வாழ்கின்ற தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழிமூலமான கல்வி திணிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற ஒரு சில தமிழ் பாடசாலைகளின் வளங்கள் குறைக்கப்பட்டு தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவையெல்லாம் தாயகத்தில் தமிழ் மொழியை படிப்படியாக அழிப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகள்.
புலத்தில் தமிழ்.
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் எமது இரண்டாவது தலைமுறை தமிழ்மொழியையும் தமிழ் கலாசாரங்களையும் இழந்துவிடக்கூடிய ஒரு அபாய நிலை தோன்றியுள்ளது. இங்குள்ள பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலை இருப்பினும், தாய் மொழியான தமிழை இரண்டாம் தர மொழியாகக் கூட கற்பதற்கு பின்னடிக்கிறார்கள் அல்லது விருப்பமற்ற நிலைக்கு தாங்களாகவே செல்கிறாhகள். –வேலை வேலை என்று ஓய்வின்றி இயந்திரத் தனமாக ஓடித்திரியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதான கவனிப்பை செலுத்த முடியாத காரணத்தால் வெளிநாடுகளில் உள்ள அக, புறச் சூழல் பிள்ளைகளினுடைய வாழ்வில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. அத்தோடு அந்நிய தேசங்களில் எமது பிள்ளைகளிடம் இருந்து தமிழ் மொழி பறிக்கப்படுகிறது. மொழி பறிக்கப்படும் போது வாழ்க்கைமுறை, பண்பாட்டுமுறை, கலாசார முறைகள் ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் அடையாளமே பறிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலை எற்பட்டுவிடுகிறது.
இதைவிட பிள்ளைகளினுடைய காட்சிகளில் தமிழ் இல்லை. உரையாடல்களில் தமிழ் இல்லை. இப்படி எங்களுடைய பிள்ளைகள் தமிழ் மொழியில் இருந்து விலகி நிற்கும் சூழலால் இவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள வெளி நீண்டுகொண்டே செல்கிறது. உதாரணத்திற்கு வீட்டிலுள்ள இரண்டு சகோதராகள் தாய் மொழியைத் தவிர்த்து தாம் வாழம் நாட்டினுடைய மொழியிலேயே உரையாடுகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பிற மொழிப் படங்களையும் காட்டூன்களையும் தேடுகின்றார்கள். இது கூட மொழியை கற்றுக்கொள்வதற்கான வழியை அடைத்துவிடுகிறது எனலாம்.
உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான். அவர்களுடைய போரியல் வீழ்ச்சிக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள் எல்லாம் தறிகெட்டு குட்டிச்சுவர்களாகிவிட்டது. மொழியை வளர்ப்பதில் முன்னர் இருந்த உற்சாகமும் உத்வேகமும் குறைந்துகொண்டே செல்வதும் புலத்து தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியறிவு குறைவதற்கு ஒரு காரணம்.
ஒரு முறை இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து க.ப.அறவாணர் (முன்நாள் துணைவேந்தர்) பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது வரவேற்பு கூடத்தில் அவருடன் கூடவந்தவர்களுக்கும் சேர்த்து அவரவர் தாய் மொழியில் வணக்கம் சொல்லி வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லோரும் அங்கிருந்த கருவியை (Head Phone) எடுத்து காதில் பொருத்தி தங்கள் தாய்மொழியில் வரவேற்பை கேட்டு மகிழ்ந்தார்கள். அவர்களைப் போல அறவாணர் அவர்களும் அந்த கருவியை எடுத்து காதில் பொருத்தி கேட்டார். அப்போது அவருடைய முகம் ஏமாற்றம் கலந்ததாக மாறியிருந்தது. இதனை அவருக்கு அருகில் இருந்த வேறு நாட்டு நண்பர் ஒருவர் அவதானித்துவிட்டு கேட்டாராம் ஏன் உங்கள் தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லையா என்று? அப்போது அறவாணர் சொன்னாராம் இல்லை எனது தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லை என்று.
மீண்டும் கூட இருந்த நண்பர், உங்கள் நாடு இந்தியா தானே உங்கள் தாய்மொழி ஹந்தி தானே. ஹந்தியில் வணக்கம் சொல்லவில்லையோ என்று. அப்போது அறவாணர், எனது நாடு இந்தியா தான். இந்தியாவின் தேசிய மொழி ஹந்தி தான். ஆனால் எனது தாய் மொழி ஹிந்தி அல்ல. நான் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகிறேன். எங்களுடைய தாய் மொழி தமிழ், நாங்கள் தமிழ்மொழியைத்தான் பேசுபவர்கள் என்றாராம். என்ன சொன்னீர்கள்? ஓ! உங்களுடைய தாய் மொழி தமிழா? நீங்கள் தமிழ் தான் பேசுவீர்களா? அப்படியாயின் அது பிரபாகரன் பேசுகின்ற மொழிதானே! என்றாராம். இப்படி எமது மொழியையும் வீரத்தையும் உலகம் வியப்புடன் அறிந்திருக்கையில் நாம் எமது மொழியை பேச தயங்குவதேன்? கற்றுக்கொள்ள மறுப்பதேன்?
யூதர்கள் தங்கள் நாட்டை விட்டு துரத்தப்படும் போது துக்கம் நிறைந்த வலிகளோடு தான் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்களுடைய கனவுகளில் தாங்கள் வாழ்ந்த தேசம், மொழி மீதான பற்று சற்றும் விடுபட்டுப் போகவில்லை. காலவோட்டம் பல ஆண்டுகளாக அவர்களது விடுதலையைத் தாமதப்படுத்தியிருந்தன. தங்கள் தாய் மொழியை தாம் வாழுகின்ற தேசங்களில் திக்கொன்றாக சிதைந்து அறுநூறு (600) வகைகளில் பேசினார்களாம். ஆனால் இன்று அந்த மொழியை ஒரு குடையின் கீழ் ஒரு மொழியாக்கி மீண்டும் தமது மொழியை சரியான முறையிலே தமது சந்ததிக்கு புகட்டினார்கள். அடுப்படியில் இருந்து ஒவ்வொரு பொருளாக தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டி அதன் அர்த்தங்களை சரியாகப் புரிய வைத்து கற்பித்தார்கள். இன்று யூதர்களின் ஹீபுறு மொழி கணனி உலகில் 2வது இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். நாம் யூதர்களிடம் இருந்து படிக்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.
இதனிடையே நாடு கடந்த நிலையில் மலேசியாவிலே சீனர்கள் சீன மொழியை வளர்த்து வருகிறார்கள். எப்படித் தெரியுமா? அங்கு அதிகமான பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களிடம் சென்று சீனமொழியில் உரையாடி மீன் வாங்கினால் இரண்டு வெள்ளிக்காசுகள் குறைவாக அந்த மீனை விற்பனை செய்கிறார்களாம். இந்த மொழியுணர்வைத் தான் ரஷ்யக் கவிதையொன்று இப்படிச் சொல்கிறது.
நான் செத்துக்கொண்டிருந்தேன்
யாரோ என் தாய் மொழியில் பேசினார்கள்
எழுந்து கொண்டேன் – என்று
தமிழ் உறவுகளே!
எங்களுடைய அடுத்த சந்ததிக்கு நாம் எதை விட்டுச்செல்லப் போகிறோம்? ஏன்ற கேள்வி சந்தேகத்துடன் தொக்கி நிற்கிறது. எமது தமிழ் இனம் தொடர்ந்து அதே பெறுமதியுடன் வாழவேண்டும். உலகிலே பலவற்றை சாதிக்க வேண்டும் என்றால் தாய் மொழியான தமிழோடு விடுதலை உணர்வையும் எமது சந்ததிக்கு ஊட்டிச் செல்லவேண்டும். எங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழை அறிமுகப்படுத்த வேண்டும். கம்பனை, வள்ளுவனை, பாரதியை, பாரதிதாசனை, விபுலானந்தரை அறிமுகப்படுத்துவோம். ஏன் எங்களது போராட்ட தலைவர்களையும் போராட்ட வரலாறுகளையும் சொல்லிக்கொடுப்போம். இவற்றுக்கு மேலாக தமிழர்களோடு தமிழில் பேசக் கற்றுக்கொடுப்போம். மொழி உணர்வால் ஒன்று பட்டு உலகமெலாம் தமிழ் வளர்ப்போம். எமது தாய் மொழியை அழிக்க நினைப்பவனை பாரதிதாசன் வரிகளில்
பொங்கு தமிழுக்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் உண்டென்று சங்கே முழங்கு என்று உரக்கச் சொல்வோம். அதையே செய்வோம்.
- சுதேசிகன்]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>70 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் அனாதைகளாக இறந்த தமிழர்கள் </title>
			<link>http://www.valaicharam.com/news/70+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+</link>
			<description><![CDATA[70 -ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில், அனாதைகளாக இறந்த அடிமைத் தமிழ்த் தொழிலாளர்க்கு எமது அஞ்சலி !
1942 – 1945 ஆண்டுகளில் ஜப்பானியர்களால் 2- வது உலகப் போரின்போது தாய்லாந்து – பர்மா தொடர்வண்டி போடப்பட்டது. இதில் அனாதைகளாக இறந்த 90000 – பேரில் பலர் தமிழர்கள் என்பது உலகறியாத உண்மையாகும். அவர்கள் நோயினாலும், பட்டினியாலும் அனாதைகாளாக இறந்து அழிந்தது, மலேயாவிலிருந்த அவர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பது கொடுமையல்லவா ? அந்த வலி பட்டவருக்கே புரியும் !

இங்கிலாந்து, கனடா, டச்சு , ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து இந்த மரண ரயிலில் இறந்த தன், நாட்டு படை வீரர்களின் உறவினர் இன்றும் வந்து அஞ்சலி செய்கிறார்கள் ! ஆனால் அநாதை தமிழன் அழிந்ததை தமிழராகிய நாம் அறிவோமா ? நாம் தான் அறியாதவர்கள் ஆயிற்றே ! எதைப் பற்றியும் கவலைப் படாதவர் ஆயிற்றே ! என்று தனது மனப் புலம்பலை வெளியிட்டுள்ளார் தஞ்சையில் இருந்து கே.கண்ணன் அவர்கள்.
1942 ஆம் ஆண்டு யூன் மாதம் ஜப்பானின் இராணுவ ஜெனரல் ஒருவர், 250 கிலோமீட்டர் நீளமான ரயிவே பாதை ஒன்றை நிர்மாணிக்க உத்தரவிட்டார். தாய்லாந்தில் இருந்து பர்மா வரை இந்த ரயில்வே பாதையைப் போட சுமார் பதினாறாயிரம்(16,000) பேர் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பலர் தமிழர்கள். இவர்கள் பின்னர் சிறைக்கைதிகள் போல நடத்தப்பட்டனர். ரயில்வே பாதை கட்டி முடிக்கும் வரை அவர்களை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இக் கைதிகளில் சீனர்கள், தமிழர்கள், மலேசியர்கள், பர்மியர்கள், ஜாவா தீவு மக்கள் மற்றும் டச் மக்களும் அடங்குவர். கொத்தடிமைகளாக இவர்கள் பல ஆண்டுகள் நடத்தப்பட்டனர். போதிய உணவை உண்ணாமலும், சத்தில்லாத உணவுகளை அவர்கள் உட்கொண்டதாலும் அவர்களில் 9,000 பேர் படு பயங்கரமாக மரணமடைந்தனர்.
கடும் நோயல் பாதிக்கப்பட்டும், சத்தான உணவின்றியும், மிகவும் பரிதாபமாக இறந்த தமிழர்கள் குறித்து இதுவரை பலர் அறிந்திருக்கவில்லை. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அனாதைகளாக இறந்த இத் தமிழர்கள் தொடர்பாக அதிர்வுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை நாம் தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். தாய்லாந்து நாட்டில் காஞ்சனாபுரி என்னும் இடத்தில் இவர்களுக்கான நினைவுத் தூபி இருக்கிறது. அங்கே சீனர்கள் , டச்சுக்காரர்கள், அமெரிக்கர்கள், மற்றும் கனடா நாட்டு மக்கள் சென்று தமது உறவினர்களுக்கு மலர்வளையங்களை வைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழர்கள் சிலர் அங்கே சென்று, அனாதைகளாக உலகமே அறியாத நிலையில் இறந்துபோன எமது தமிழ் மக்களுக்கு ஒரு அஞ்சலியை ஏன் செய்யக்கூடாது ?

In June, 1942, the Japanese General Headquarters directed its army to build a single-line meter gauge railway 250 miles long from Thailand to Burma. The railway was to carry 3,000 tons per day from Ban Pong in Thailand via the Three Pagodas Pass on the Thai-Burmese border to the Burma Railway at Thabyuzayat between Moulmein and Ye. The work was to be completed within 14 months, or by the end of 1943 at the latest.
Work started in October, 1942, to meet the August, 1943, deadline. The deadline was later extended to November “43”. The more than 250 miles of railway, much of it through jungle terrain, was finally completed at the end of October, 1943. More then 16,000 prisoners of war and 100,000 impressed labourers, including Chinese, Tamils, Malays, Burmese, Javanese and Indishe Jongens (of mixed Dutch-Indonesian blood), died building the railway. Most of the deaths were from sickness, malnutrition and exhaustion.
http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா பொன்சேகாவின் விடுதலைக</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF</link>
			<description><![CDATA[ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும்,  மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது.
கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்பதனை அமெரிக்கத் தரப்பினரிடம் கூட்டமைப்பினர் உறுதிபடத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டினை முன்வைக்காமல் பின்னடிப்பதாக விமர்சனங்கள் எழுவதை அண்மைக்காலமாகக் காணலாம்.

இருப்பினும் ஸ்டீபன் ராப், றொபேர்ட் ஓ பிளேக், மரியா ஒட்டோரோ போன்ற அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பயண நிகழ்ச்சி நிரலில், நிரந்தரத் தீர்வு குறித்த விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றினை மேற்குலக அணியினர் கொண்டுவந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே அது அமையுமென அமெரிக்க பிரதிநிதிகள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

இந்நிலையில், பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமைப் பேரவையை ஆட்டிப்படைக்கும் வல்லரசாளர்கள், சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணையன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை முன்மொழியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு, பேரவையிலுள்ள 47 நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரவு வழங்கும் வாய்ப்புண்டு.

அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டு மென்கிற தீர்மானத்தை முன்வைத்தால் சீனா. இரஷ்யா மற்றும இந்தியா சார்பு நாடுகள் அதனைப் பலமாக எதிர்க்கும் நிலை தோன்றும். அதற்கான அணிதிரட்டலில்,  வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசின் தலைமையில் ஆபிரிக்காவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் பல குழுக்கள் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பிரிக்ஸ் (BRICS) எனப்படும் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்கிற வளர்ச்சியுறும் பெருண்மிய ஆதிக்க நாடுகளின் ஆதரவைக்கொண்டு, மேற்குலகின் வியூகத்தை இலகுவாக உடைத்துவிடலாமென அமைச்சர் டி.யூ.குணசேகரா அண்மையில் தெரிவித்த கருத்து, நோக்கப்பட வேண்டிய தொன்றாகும். புவிசார் அரசியலில், மாறிவரும் உலக ஒழுங்கு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களிற்கு சாதகமாக அமைவது போல் தெரியவில்லை.
தேசிய இனப் பிரச்சினையை தமது பிராந்திய, பூகோள நலன்களை அடைவதற்கானஅழுத்தக் கருவியாக இவ் வல்லரசுகள் பயன்படுத்துவதை மனித உரிமைப் பேரவையில் காணலாம். சிரியாவிற் கெதிராக அரபு லீக்கின் துணையோடு, பாதுகாப்புப் பேரவையில் தீர்மானமொன்று முன்வைகப் பட்டபோது, சீனாவும், இரஷ்யாவும் தமது வீட்டோ என்கிற இராமபாணத்தை ஏவி, அதனை முறியடித்தன.
பேரவையின் 15 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 13 நாடுகள் சிரியாவிற்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தாலும் அத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை விவகாரத்திலு, இதே விதமான மோதல் நிலைமை, வேறு பரிமாணத்தில் காணப்படுகிறது. இங்கு மேற்குலகம் – இந்தியா என்ற வழுவழுத்த உறவுநிலை, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படுகிறது. இலங்கை மீது மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும் போது, அதிலிருந்து விடுபட, தன்னாலான உதவிகளைச் செய்ய முடியுமென்கிற செய்தியைக் கூறியவாறு, மகிந்த அரசோடு நெருங்க முயல்கிறது இந்தியா.
இக் கருத்தியலின் அடிப்படையில், சுயாதீன சர்வதேச விசாரணை என்கிற இலங்கை உடனான உறவு முறிவு நிலைப் போக்கினை மேற்குலகம் மேற்கொண்டால், நிச்சயம் அதனை இந்தியா எதிர்க்கும். ஆகவேதான், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டு மென்கிற அழுத்தத்தைக் கொடுக்க, மேற்குலகம் முயற்சிக்கிறதெனாலாம். இதனூடாக இலங்கை அரசின் மீது சர்வதேச நெருக்கடியை உருவாக்கி, ஆட்சிமாற்ற மொன்றினை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகிறது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகியுள்ள கடன் நெருக்கடி, ஏனைய உலக நாடுகளிலும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடை நகர்வால், இலங்கையில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் கடன் தொகை அதிகரிப்பதால், கடன் பெறும் அளவை 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்குமாறு பாகிஸ்தானுடன் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால்.
தேவையில்லையென்று அடம் பிடித்த, சர்வர்தேச நாணய நிதியத்தின் எட்டாவது தவணைக் கொடுப்பனவான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தருமாறு கெஞ்சுகிறது இலங்கை அரசு. அத்தோடு யாழ்ப்பாணம் செழிப்புறுகிறது என்று, என்னதான் கண்காட்சிகளை அரசு நடத்தினாலும், மக்கள் மீது செலுத்தப்படும் வரிச்சுமை குறைவடையவில்லை. இதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் ஆளுமை இரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்கிற யதார்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்கிறது.
ஆகவே விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட மகிந்த அரசு மீதான பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பலமாக இருப்பதால், அதே யுத்தத்தை வழிநடத்திய சரத்பொன்சேகாவினால் மட்டுமே, மகிந்தவிற்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியுமென மேற்குலகம் கருதுவதை நோக்கலாம்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது தடவையாக அவரை களமிறக்கும் முயற்சியைத் தவிர வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், போர்க்குற்ற விசாரணை என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருக்கும் பொன்சேகாவை வெளியில் கொண்டுவர முடியுமாவென்று முயற்சித்துப் பார்க்கிறது மேற்குலகம். இந்த வியூகத்தை முறியடிப்பதற்காகவே, மன்னிப்புக் கோரினால் விடுதலை செய்வோமென, பல து£துவர்களை அனோமா பொன்சேகாவிடம் அரசு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மன்னிப்புக் கேட்டு அடிபணிந்து சென்றால், அதனையே பெரும் பரபரப்பாக மாற்றி விடலாமென்று மகிந்தர் எண்ணியிருந்தார். ஆனாலும், மன்னிப்புக் கோராமலே, அவரை வெளியில் கொண்டுவரும் வழிவகைகள் எம்மிடம் உண்டென மகிந்த எதிர்ப்பு வல்லரசாளர்கள் சத்தியம் செய்ததால், அத்தகைய சரணடைவுப் பாதையை அனோமா கொம்பனி கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது.
ஆகவே தமிழ் மக்களைவிட, அனோமா பொன்சேகா குழுவினரே மனிதஉரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்று நம்பலாம். இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது ஓரிரு தினங்கள் பின்பாகவோ சரத்பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால். மேற்குலகின் தீர்மானங்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கைவிடப்படும்.
- இதயச்சந்திரன்
நன்றி :ஈழமுரசு]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>தமிழீழம் ஒன்று தமிழீழ விடுதலை ஒன்று தமிழீழப் போர்க் களமும் ஒன்றே</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87</link>
			<description><![CDATA[விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது.
அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழீழ மக்கள்மீது பாரிய இனப் படுகொலையை நடாத்தி முடித்த சிங்கள அரசு, அதற்கான பின் விளைவுகளைத் தற்போது எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு யுத்தத்தின் வெற்றி என்பது தமக்கான தடைக்கல்லை நீக்குதல் அல்லது தமது எதிரியை அழித்தல் என்பதுடன் முற்றுப்பெற்று விடுகின்றது. இரண்டாவது உலகப் போரின் பின்னர் இந்த அணுகுமுறையையே மேற்குலகு கடைப்பிடித்து வருகின்றது.
ஜெர்மனியில் கிட்லரின் மரணத்துடன் அந்தப் போர்க்களம் நிறைவுக்கு வந்தது. நாசியப் படைகளின் செயலுக்காக ஜெர்மனிய மக்களைத் தண்டிப்பதற்கு நேச நாட்டுப் படைகள் முயற்சிக்கவில்லை. ஜெர்மனிய மக்களை அந்த நினைவுகளிலிருந்து மீட்டு, நிமிர்ந்து நிற்கும் அதிசயத்தை அங்கு ஏற்படுத்திக் கொடுத்தன. இதே அணுகுமுறையைத்தான் ஜப்பான்மீது அணுக்குண்டுகளை வீசிய அமெரிக்கா அந்த மக்களை மீட்டெடுக்கும் பணியில் மேற்கொண்டது.
பௌத்த – சிங்களப் பேரினவாதக் கோட்பாட்டுக்குள் புதைந்துபோயுள்ள சிங்கள மக்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் இந்த மனிதாபிமான தார்ப்பரியம் என்றுமே புரிந்ததில்லை. பிரித்தானியாவிடமிருந்து விடுதலைபெற்ற காலம் தொடக்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களது குருதி கொண்டு எழுதப்பட்டுவரும் மகாவம்சத்தின் தொடர்ச்சி இனிமேலும் மாறுவதற்கான சாத்தியம் சிங்கள தேசத்திலிருந்து வெளிப்படாத காரணத்தால், ஈழத் தமிழர்கள் மீதான மேற்குலகின் அக்கறை அதிகரித்துச் செல்கின்றது.
விடுதலைப் புலிகளின்பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதாகத் தெரிவித்து, சிங்கள ஆட்சியாளர்கள் நடாத்திய போர் எல்லை மீறிச் சென்றபோது, அதனைத் தடுக்க முற்பட்ட அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள்மீது இந்தியா தனது செல்வாக்கைப் பிரயோகித்து நிறுத்தியது. விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ மூலமாகச் சில வாக்குறுதிகளையும் பெற்றுக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ‘தமிழர்களுக்கு உரிய கௌரவமும், நியாயமான தீர்வும் வழங்கப்படும்’ என்பதே அந்த உறுதிமொழி.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பலிகொண்ட இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், வெற்றி மமதையில் மிதந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைப் பழிவாங்கும் தங்கள் இன மேலாதிக்க செயற்பாடுகளைத் தொடர்ந்தார்களே தவிர, அழிவுகளையும், அவலங்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்கத் தயாராகவில்லை. இதுவே, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான மேற்குலகின் அழுத்தங்களாக அதிகரித்து வருகின்றது.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேற்குலக நாடுகள் கொண்டுவரத் தீர்மானித்திருக்கும் சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைக்கான தீர்மானத்திற்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இதனை முறியடிப்பதற்கு, சிறிலங்கா அரசும் தனது நேச நாடுகளுக்கு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வருகின்றது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கடந்த வியாழனன்று நிறைவேற்றி, அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளது.
இறுதிப் போரின் இறுதிக் காலங்களில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணையம் ஒன்று நிறுவப்படுவதை வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தகைய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் வெளியானதிலிருந்து, இத்தீர்மானத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கத்தின் ஆதரவு சக்திகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.
பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்கள் சிங்திய கண்ணீருக்கும், கொட்டிய குருதிக்கும், வழங்கிய உயிர்ப் பலிக்கும் நீதி தேடும் களமாக ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அமையப் போகின்றது என்பதில் சிறிதும் சந்தேகம் கிடையாது. நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்பாவிட்டாலும், உலகின் உயர் மன்றமான ஐ.நா.வில் ஈழத் தமிழர்களது விவகாரம் முக்கிய விடயமாக ஆராயப்படும் நிலையே தமிழீழ விடுதலையின் பாதி வெற்றியாகிவிடும்.
தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஒருமுகப் படுத்தி, புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களே தமிழீழ விடுதலையை முழுமையடைய வைக்கும். அதனாலேயே, சிங்கள ஆட்சியாளர்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும், போட்டிகளையும் ஊக்குவித்து வருகின்றார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களுக்கான குரல்கள் பெருக வேண்டுமாயின், அதன் முற்றத்தில் தன்னையே எரித்து நீதி கேட்ட முருகதாசன் திடல் புலம்பெயர் தமிழர்களால் நிறைக்கப்பட வேண்டும். அதனைத் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகின்றது. எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்ற சிங்கள தேசத்தின் காய் நகர்த்தலுடன், தமிழ்க் குழு ஒன்று தமிழ்த் தேசிய முறியடிப்புச் சமரில் இறங்கியுள்ளது.
தமிழீழம் ஒன்று, தமிழீழ விடுதலை ஒன்று, தமிழீழப் போர்க் களமும் ஒன்றே. அதனை மலினப்படுத்த எண்ணும் எவரும் உண்மையான தமிழனாக இருக்க முடியாது. தமிழீழ விடுதலை மட்டுமே இலட்சியமாக இருந்தால், அந்தப் போர்க் களத்தில் பங்காளியாக இருப்பது மட்டுமே சாத்தியமாகும். இருக்கும் சில நாட்களிலாவது சிதைக்கும் எண்ணம் கொண்ட குழுவின் மனம் மாறும் என்று நம்புவோம். அவர்களும் புலம்பெயர் தமிழர்களது ஜெனிவா போர்க் களத்திற்கு மார்ச் 05 ஆம் திகதி அணி திரள்வார்கள். இல்லையேல், வரலாறு அவர்களைக் கறையாகவே தன் பக்கங்களில் பதிவு செய்யும்.
- சுவிசிலிருந்து கதிரவன்
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>பிள்ளை வளர்ப்பு ஒரு குடும்ப வன்முறை</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88</link>
			<description><![CDATA[பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா.
          
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>டர்பன் மாநாடு ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link>
			<description><![CDATA[அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.
          
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D</link>
			<description><![CDATA[இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.
          
]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 16:00:03 MST</pubDate>
			</item><item>
			<title>விஜய் டிவி - முன்ஜென்மம் நிகழ்ச்சியில்...</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...</link>
			<description><![CDATA[சிறுகதை: &quot;தனியாக இருக்காதே...&quot; -சூர்யகுமாரன் மின்வெட்டு, பால்விலை, யூவராஜ்சிங், அமிதாப் பச்சனின் ஆபரேஷன், அமலாபால் என்று சிக்கலாக இருக்கும் உங்களது தினவாழ்க்கைக்குள் சற்று முன் அனுமதியில்லாமல்தான் குறுக்கிடுகிறேன்.மன்னிக்கவூம். எனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.என் பிரத்யேக அறைக்குள் வரும் யாரும் சுவற்றில் மாட்டியிருக்கிற லேமினேடட் படத்தைப் பார்த்து விட்டு மார்லன்பிராண்டோவா என்று கேட்டிருக்கிறார்கள்.அது ராபர்ட் எட்மான்ட் ஜோன்ஸ்.உலகின் முதல் காஸ்ட்யூம் டிசைனர்.இல்லை உலகின் முதல் காஸ்ட்யூம் டிசைனர் ஏவாள்தான் என்று குறுக்கே வருபவர்கள் விலகிக் கொள்ளவூம்.நான் சற்று சீரியசாக சொல்ல விரும்புகிறேன் இந்த கதையை.ஸாரி உண்மைச் சம்பவத்தை.   என் பெயர் ரிஷி.பஞ்சவதன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில், விருமாண்டி சந்தனம் என்ற பிடிவாத தமிழ்ப்பெயர்களுக்கு மத்தியில் எனக்கு இரண்டே எழுத்தில் ரிஷி என்று பெயர்.இதையூம் சுருக்கி என் கேர்ள் ஃப்ரன்ட்கள் என்னை &#039;ர்ரி&#039; என்று அழைப்பார்கள்.இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.எனக்கு கல்யாணமாகி விட்டது.சுபத்ரா வந்த பிறகு வாழ்க்கை மாறிப்போய் விடும் என்றெல்லாம் நினைத்தேன்.தவறு. நான் ஒரு காஸ்ட்யூம் டிசைனர்.பொதுவாக படங்களின் ப்ரிபுரொடக்ஷனின் போதே என் வேலையை 90 சதவீதம் முடித்து விடுவேன்.சில மல்டிஸ்டார் படங்களில் மட்டும் வேலை கழுத்தைப் பிடித்து இறுக்கும்.நான் நேரங்கழித்து வந்தால் மற்ற பெண்கள் போல சுபத்ரா குற்றப்பத்திரிகை வாசிக்க மாட்டாள்.ரொம்ப சுலபம்.எனக்கு டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்து விட்டு துரங்கி விடுவாள். இந்த கதை சுபத்ரா பற்றியல்ல என்றாலும் கொஞ்சம் கிட்டே வாருங்கள்.சுபத்ரா பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன்.அவள் சாகப் போகிறாள்.அனாமத்தாக.யாருமே காப்பாற்ற முடியாமல்.காரணம் அப்புறம் சொல்கிறேன். நான் மதுக்கிருஷ்ணனுடன் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்து அவன் சிஜி செய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த சிஜிக்கு பொருத்தமாக நான் என் காஸ்ட்யூம் வேலையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.கதாநாயகியாக நடிக்கும் தெலுங்குப் பெண்ணிற்கு உடலில் இடுப்பைத் தவிர எதுமில்லை.அதனால் அவள் இடுப்பை வைத்து ஆட விட்டு பாடல்களை ஒப்பேற்ற வேண்டும் என்று டைரக்டர் காலையிலேயே நோட்பேடில் பாடலுக்காக குறிப்புகள் தந்து விட்டுப் போயிருக்கிறார். சிஜியில் ஹீரோயினின் இடுப்பு வசீகரமாக கிள்ளிப் பார்க்கலாமா என்று விரல்களை பரபரக்க வைத்தது.பின்புறத்தை சற்று பெரிதாக்கி விடுமாறு டைரக்டர் சொல்லியிருப்பதால் அதை கவனித்துக் கொண்டிருந்தான் மதுக்கிருஷ்ணன். அப்போது என் செல்பேசி ஒலித்தது.ஒரு தனியார் தமிழ்ச்சேனலிலிருந்து ஆங்கிலத்திலஅழைத்தாள் ஒரு பெண்.அவர்களது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைக்க விரும்புகிறார்கள்.என்ன ப்ரோக்ராம் என்றேன்.&#039;முன் ஜென்மம்&quot; என்றாள்.அப்படி ஒரு ப்ரோக்ராம் ஏதும் வருகிறதா?எப்போதாவது நான் டிவி பார்ப்பேன்.அதுவூம் எம்ஜிஎம்மில் பழைய கிளாசிக் ஆங்கிலப் படங்கள் என்றால் மட்டுமே.அதென்ன முன்ஜென்மம்.ஏதேனும் சித்தர்கள் ஆவி சம்பந்தப்பட்ட வாரஇறுதி சீரியல் போன்ற டிஆர்பி ரேட்டிங் எகிறச் செய்யூம் நிகழ்ச்சியா? அதன்பின் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் அழைத்தார்.அவரை நான் சில படங்களில் பார்த்திருக்கிறேன்.ஸ்டன்ட் நடிகராக இருந்து குணச்சித்திர நடிகரானவர்.&quot;ரிஷி சார்.நீங்க அவசியம் கலந்துக்கனும்&quot;&quot;என்ன ப்ரோக்ராம் அது.என்னமோ சென்மம்னாங்க&quot;&quot;யா.முன் ஜென்மத்துல நீங்க யாரா அல்லது என்னவா இருந்திங்கன்னு கணிச்சி உடனே சொல்லிருவோம்&quot;&quot;உடான்ஸ்&quot;என்று சிரித்தேன்.&quot;நம்புங்க ரிஷி.முதல்ல சில கேள்விகள் கேட்பம்.அப்புறம் உங்களை படுக்க வைச்சி மனோவசியப்படுத்தற மாதிரி உங்க மனதை பின்தொடர்வோம்.கடைசியில நீங்க யாரா என்னவா இருந்திங்க முன் ஜென்மத்துலன்னு நீங்களே சொல்லிருவிங்க&quot;என்றார்.&quot;ஓகே.ஏதோ சொல்றிங்க.நீங்க சொல்றதை நாங்க நம்பித்தானே ஆகனும்&quot;என்றேன் அரைமனதாக.&quot;நாங்க சொல்ல மாட்டம்.நீங்களே சொல்விங்க.&quot;அடுத்த வாரம் வரச்சொன்னார்கள்.வண்டி அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.எனக்கு செல்ஃப் டிரைவ்தான் பிடிக்கும்.ஸ்கோடா வைத்திருக்கிறேன்.சுபத்ராவை விட எனக்கு என் கார் மேல்தான் காதல் அதிகம்.ஸ்டுடியோவிற்கு சென்றதும் உள்ளே ஒரு அறையில் உட்காரச் சொன்னார்கள்.அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வந்து பவ்யமாக சிரித்து என் கைகள் பற்றி குலுக்கி விட்டு நான் வேலை பார்த்த படங்களில் சிலவற்றை சொல்லி அதிலிருந்து காஸ்ட்யூம் உன்னதம் பற்றி புகழ்ந்தார்.பயோடேட்டாவை சரியாகப் படித்திருப்பார் போலிருக்கிறது என்று புன்னகைத்தேன்.அப்புறம் நிஜய்ரத்தினம் கதவை திறந்து கொண்டு சிரிப்புடன் உள்ளே வந்தார்.&quot;நீங்க எங்க புரோக்ராமை நம்பலை போலிருக்கு&quot;&quot;எனக்கு சென்மம்கற கான்சப்ட்டே தப்புன்னு படுது நிஜய்.மனுஷ உடம்பே ஒரு மெஷின் மாதிரி.எப்ப வேணா ரிப்பேராகி காயலான் கடைக்கு போயிரலாம்&quot;&quot;சரி.வாங்க செட்டுக்கு போயிரலாம்.நாங்க சொல்றது நுரத்துக்கு நுரறு சரியா இருக்கும் ரிஷி சார்&quot;&quot;அதை எப்படி நம்பறது நிஜய்ரத்தினம்.ஏதாவது ப்ருப் தருவிங்களா..&quot;&quot;உங்களுக்கு மட்டும் சொல்றேன்.நீங்க ஸ்பெஷல் செலிப்ரட்டி கெஸ்ட்டுங்கறதால போன ஜென்மத்துல நீங்க என்னவா இருந்திங்கன்னு மட்டுமில்லாம போன ஜென்மத்துல உங்க கடைசி தினத்துல இருந்தவங்க இந்த ஜென்மத்துல எங்கே இருக்காங்கன்னு ஒரு க்ளு மாதிரி சொல்றேன்.யார்கிட்டயூம் சொல்லிராதிங்க&quot;என்றார். நிகழ்ச்சி அரங்கில் என்னை அமர வைத்து விட்டு லைட்டிங் கேமரா கோணம் எல்லாவற்றையூம் சரிபார்த்தார்கள்.ஒரு பெண் காமராவிற்கு பின்னால் நின்று கொண்டு என்னை பார்த்தாள்.தவறு.ஏறக்குறைய சைட்தான் அடித்தாள். ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்றதும் நிஜய் ரத்தினம் என்கைகளைப் பற்றி குலுக்கி விட்டு என்னை ஒரு சேரில் அமர வைத்தார்.என்னைப் பற்றி சில கேள்விகளை கேட்டார்.நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது காமராபெண் குபுக்கென்று சிரித்து விட்டதில் நான் கவனம் கலைந்தேன்.நாலைந்து முறை கட் செய்தார்கள்.அப்புறம் அவளை வெளியே அனுப்பி விட்டு காமரா ஓட அவள் செட் ஓரத்திலிருந்த ஒரு பழைய மோட்டார்பைக்கில் அடியில் அமர்ந்து கொண்டு என்னையே பார்ர்ர்த்துக் கொண்டிருந்தாள்.மறுபடி கட்.&quot;வாங்க ரிஷி இதுல படுத்துக்கங்க.ரிலாக்ஸ்ட்டா ஃபீல் பண்ணுங்க.எந்த பயமும் வேண்டாம்.கண்களை மூடிக்கங்க.கேட்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்&quot;&quot;ட்ரை பண்றேன்&quot;என்றேன்.கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார் நிஜய்ரத்தினம்.அப்புறம் கேள்விகள் கேட்பது குறைந்து..நிசப்தம்.நான் என்னையூமறியாமல் பேச ஆரம்பித்தேன்.&#039;நான் ஆமதாபாத்தில் பிறந்தேன்.தீரஜ்லால்ஹீராசந்த்தை நான் அப்போதே அறிவேன்.இரண்டு பேரும் துணி வியாபாரம் செய்திருக்கிறௌம்.தீரஜ்லால்ஹீராசந்த் என்றால் உங்களுக்கு புரியாது.சுருக்கமாய் அம்பானி என்று சொன்னால் புரிந்திருக்கும்.அப்புறம் எனக்கு பிசினஸ் செட் ஆகாமல் டெக்ஸ்டைல் டிபார்மன்ட்டில் அரசாங்க வேலை கிடைத்து ஆபீசராகி விட்டேன்.வசதியான வாழ்க்கை.டில்லியில் குடித்தனம்.அழகான மனைவி.குழந்தைகள் இல்லை.சின்னதாய் ஒரு சராசரி இந்தியனாக இருந்த நான் ஒருநாள் செத்துப் போனேன்.இல்லை.அப்படியில்லை.எல்லாரும் போல வயதாகிப்போய் நான் சாகவில்லை.என்னை யாரோ மண்டையில் அடித்து கொலை செய்தார்கள்.யாரென்று நான் திரும்பிப் பார்ப்பதற்குள் கண்களுக்குள் வகிதாரஹ்மானோ ஆஷா பரேக்கோ இல்லை வேறு யாரோ மசமசப்பாக தெரிந்தார்கள்.அதற்குள் நான் சுத்தமாய் செத்துப் போயிருந்தேன்.அப்புறம் ரீல் அறுந்து போன மாதிரி நான் விழித்துக் கொண்டேன்.&quot;ப்ரமாதம்&quot;என்று சிரித்தார் நிஜய்ரத்தினம்.&quot;நான் என்ன சொன்னேன்.ஏதாவது என்னை ஹிப்னடைஸ் பண்ணினிங்களா&quot;என்றேன்.&quot;இல்லை.முன் ஜென்மத்துல நீங்க அம்பானியை பார்த்து பழகியிருக்கிங்க.ஒரு கவர்மன்ட் ஆபீசரா இருந்த உங்களை கொலை செய்துட்டாங்க.அதுக்கு காரணம் என்ன தெரியூமா&quot;&quot;என்ன&quot;&quot;நீங்க தனியா இருந்ததுதான்.இனிமே தனியா இருக்காதிங்க.எங்கேயூம் எப்பவூம்.தனிமைதான் உங்களுக்கு எதிரி&quot;&quot;அப்புறம்?&quot;&quot;ப்ரோக்ராம் இஸ் ஓவர்.அடுத்த மாதம் டெலிகாஸ்ட் பண்ணுவம்.எடிட் ஆனதும் நீங்க வந்து பார்த்துக்கலாம்&quot;&quot;அப்ப சொல்றேன்னு சொன்னிங்களே&quot;&quot;என்ன&quot;&quot;என்னை யார் கொலை செய்ததுன்னு&quot;&quot;வாங்க என் ரூமுக்குள்ள போயிருவம்.அந்த காமரா அசிஸ்டன்ட் பொண்ணு உங்களை சைட் அடிக்குதுன்னு நினைக்கறேன்&quot;அவரைப் பின்தொடர்ந்து போய் அமர்ந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குள் அதிர்ச்சியை கிளப்பின.&quot;என்ன சொல்றிய்க நிஜய்&quot;&quot;ஆமா.நீங்க முன் ஜென்மத்துல கொலை செய்யப்பட்டுட்டிங்க ரிஷி&quot;&quot;அதான் சொன்னேனே ஷஷுட்டிங்ல.நீங்க என்னமோ சொல்றேன்னு சொன்னிங்களே&quot;&quot;ஓ..அதுவா..தனியான சந்தர்ப்பங்களை தவிர்த்துருங்க.தனியா இருக்கும்போதுதான் உங்களை கொலை செய்தாங்க&quot;&quot;இதுவா பதில்.என்னை கொலை செய்தவங்க இந்த ஜென்மத்துல எங்க இருக்காங்கன்னு சொன்னிங்க&quot;&quot;நீங்க வீட்டுக்குப் போனதும் புரியூம்.போய்ப்பாருங்க.புரியலைன்னா எனக்கு ஃபோன் அடிங்க.யார்னு உடனே சொல்றேன்&quot;வீட்டுக்கு திரும்பினேன்.ஏமாற்றமாகவூம் வெறுப்பாகவூம் இருந்தது.இந்த ப்ரோக்ராமில் என்னை கலந்து கொள்ள வைப்பதற்காக நிஜய்ரத்தினம் பொய் சொல்லியிருக்கிறாரா?நான் கொலை செய்யப்பட்டேன் என்றால் இந்த பிறவியில் அந்த கொலையாளி எங்கே?தனிமைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இதில் எதையாவது நான் வரிகளுக்கு இடையே வாசிக்க வேண்டுமா?கேள்விகள்...கேள்விகள்..முகேஷ் அல்லது அனில் இவர்களில் யாரையாவது நான் கேட்க வேண்டுமா?ச்சே.தப்பாக யோசிக்கிறேன்.என் வீடு ஏழாவது மாடியில்.லிஃப்டில் ஏறி காரிடாரில் அமர்ந்து கதவருகிலிருக்கும் அழைப்பு மணியை அழுத்தும் முன் திறந்து கொண்டது.உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.&quot;இந்த அபார்ட்மன்ட்ல மொத்தம் நாற்பது வீடுங்க இருக்கு.ஆனா உங்க ப்ளாட்ல மட்டும்தான் தனிமை இருக்குஇவீட்டுல நீங்க ரெண்டே பேர்தான்.எப்பவூம் தனிமைங்கறதால குழந்தை பிறக்கறதுக்கு உங்க கணவர் ஓவர்டைம் முயற்சிகள் ஏதும் செய்வாரா&quot;என்று எதிர்ப்ளாட் பெண்மணி பேசிக்கொண்டிருந்தாள்.சுபத்ரா பதிலுக்கு எதுவூம் சொல்லாமல்கேட்டுக் கொண்டிருந்தாள். எதிர்ப்ளாட் சொன்ன வார்த்தை எனக்குள் சறுக்கென்று இறங்கியது.&#039;உங்க ப்ளாட்ல மட்டும்தான் தனிமை&#039;என்ன சொல்கிறாள் இவள்?&quot;ஆமா சுபத்ரா.மத்த ப்ளாட்ல யாராவது ஓல்டு ஏஜ் பீப்பிள் கூட இருப்பாங்க.இல்லைன்னா அட்லீஸ்ட் வேலைக்காரி யாராவது வந்துட்டுப் போவாங்க.நீதான் வேலைக்கும் யாரையூம் அமர்த்திக்கலையே&quot;சுருக்கென்றது எனக்குள்.அப்போதுதான் ரீவைண்ட் செய்து பார்த்தேன்.அவள் சொல்வது உண்மைதான்.இந்த ப்ளாட்டில் நானும் சுபத்ராவூம் மட்டும்தான்.தனிமையோ தனிமை.ஆனாலும் அவள் என்னிடம் சற்று ஒட்டுதல் இல்லாமல் பழகுவது போலத்தான் இருக்கும்.இரவூகளில் அவளை ஆக்கிரமித்தாலும் அவள் முடிவில் எதுவூமே நிகழாதது போல எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு அரை செகன்ட்டில் துரங்கிப்போய் விடுவாள்.ஒரு குட்நைட் கிடையாது.மோவாயைப் பிடித்து கிள்ளியது கிடையாது.நீ சரியான முரடுப்பா என்று இடுப்பில் குத்தியது கிடையாது.ஆனால் எப்போது அழைத்தாலும் வந்து படுப்பாள்.முடிந்ததும் எதுவூமே நிகழாதது போல விலகி விடுவாள்.இத்தனை நாள் இதை நான் உணராது இருந்திருக்கிறேன்.அப்படியானால்...தனிமை...தனிமையில் ரொம்ப நேரம் என் கூட இருப்பது...தனிமையில் என்னுடனே படுத்துக் கொள்வது...சாப்பிடுவது..டிவி பார்ப்பது..எல்லாமே சுபத்ராதான்.அப்படியானால்...அவள்தான் என்னை ..அதென்ன...Nபுhன ஜென்மத்தில் என்னை...க்ரேட்.கண்டு பிடித்து விட்டேன்.என்னை கொன்றவளை.என்னை கொல்லப் போகிறவளை...வெயிட் எ மினிட்...இந்த ஜென்மத்தில் நான் முந்திக்கொண்டு விட்டால்..இப்போதே இவள் கழுத்தை நெறித்து..ச்சே.அசட்டுத் தனமாக யோசிக்காதே.சரியாக திட்டம் போட்டு ப்ளோசார்ட் போல மனதிற்குள்ளாக எழுதிக்கொண்டு அப்புறம் ஒரு சுபநாளில்..சுபத்ராவை...நினைத்துப் பார்த்தாலே இனிக்கிறது.என் செல்பேசி ஒலித்தது.&quot;நான்தான் நிஜய்ரத்தினம்.என்ன யோசிச்சிங்களா..தனிமைங்கற கீவேர்டு பயன்படுத்தி ஏதாச்சும் தேத்த முடிஞ்சதா&quot;&quot;ஏறக்குறை கண்டுபிடிச்சிட்டேன் நிஜய்ரத்தினம்&quot;&quot;க்ரேட்.நான் உங்களை கூப்பிட்டதுக்கு வேற காரணம்&quot;&quot;என்ன&quot;&quot;செட்யூல்லை எடிட் பண்ணியாச்சு.அட்டகாசமா வந்திருக்குஇ&quot;&quot;ஓகே&quot;&quot;ஆனா நீங்க மயக்க நிலைல இருக்கும்போது உங்க முகத்துக்கு குறுக்காக கலங்கலா ஒரு முகம் போல தென்பட்டது.இட்ஸ் அமேஸிங்.அதை உங்களுக்கு காட்டனும்.உடனே வாங்க.இதுவரைக்கும் எந்த அமானுஷ்யமும் எங்க எபிசோடுல முகம் காட்டலை..&quot;&quot;கதை விடாதிங்க.டிஆர்பியை ஏத்தறதுக்கு புருடா விடறிங்க&quot;&#039;இல்லை ரிஷி.இதை நான் இன்னும் எங்க ப்ரொமோ ஹெட்டுக்கு கூட சொல்லலை..வாங்க.பார்த்தா நீங்களே ஆச்சர்யப்படுவிங்க&quot;எனக்கும் முதல் முறையாக ஆர்வம் வந்தது.கிளம்பினேன்.ஸ்டுடியோவிற்குள் போனபோது நிஜய்ரத்தினம் ரெடியாக இருந்தார்.&quot;வாங்க ரிஷி.எடிட்டிங் கன்சோல் ஏழாவது ப்ளோர்ல இருக்கு.லிஃப்ட்ல போயிரலாம்&quot;லிஃப்ட்டில் புகுந்தபோது என்னையூமறியாமல் சுபத்ராவின் முகம் ஞாபகம் வந்தது.அவளை கொன்று விட்டிருக்கலாமோ?லிஃப்ட்டில் எங்களையூம் சேர்த்து ஏழு பேர் இருந்தோம்.1..லிஃப்ட் மேலேறியது குலுங்காமல்.2..இரண்டு பேர் இறங்கினர்கள்.மூன்று பேர் ஏறினார்கள்.3..நான்கு பேர் ஏறினார்கள்.4..ஐந்து பேர் இறங்கிப் போய் விட்டார்கள்.மறுபடியூம் ஏழுபேர்களானோம்.5..நான்கு பேர் இறங்கி விட இரண்டு பேர் ஏறினார்கள்.6..மூன்று பேர்கள் இறங்கி விட யாரும் ஏறவில்லை.அடுத்து ஒரே ஒரு ப்ளோர்தான்.ப்ளக்கென்று ஒரு சப்தம்.அப்புறம் சரசரவென்று என்னவோ சப்தம்.லிஃப்ட் நின்று போய் விட்டது.உள்ளே நானும் நிஜய்ரத்திம் மட்டுமே.என் செல்பேசி ஒலித்தது.எடுத்தேன்.சுபத்ரா!இப்போது லிஃப்ட்டில் எங்கள் இருவரையூம் சுபத்ராவின் குரலையூம் சேர்த்துக் கொண்டால் மொத்தம் மூன்று பேர்.&quot;என்ன சுபத்ரா&quot;&quot;திடீர்னு எழுந்து போயிட்டிங்களே.எதுவூம் டிஸ்கஷனா..&quot;&quot;இல்லை.இது வேற&quot;&quot;ஹ்ஹாவ்..எனக்கு துரக்கம் வரது.நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க&quot;என்று அவள் ஃபோனை வைத்து விட-முதல்முறையாக சுபத்ராவை கொல்ல வேண்டாம் என்று தீர்மாணித்தேன்.தனிமையான லிஃப்ட்.சரி செய்ய அரை மணி நேரமாவது ஆகும்.உள்ளே இரண்டே பேர்.நான்-நிஜய்ரத்தினம்.த.னி..மை..அப்படியானால் முன் ஜென்மத்தில் என்னை கொலை செய்தது?என் பாக்கெட்டிற்குள் கையை விட்டு கத்தி ஏதும் இருக்கிறதா என தேடினேன்.ச்சே.காஸ்ட்யூம் டிசைனரிடம் என்ன இருக்கும்.எதற்கு கத்தி?கைகள் போதாதா?கழுத்தில் வைத்து ஸ்ட்ராங்குலேட் செய்து..&quot;என்ன அப்படி பார்க்கறிங்க ரிஷி&quot;என்ற நிஜய்ரத்தினத்தின் பார்வையில் பயம் கோடிட்டிருந்தது.மெதுவாக புன்னகைத்தபடி இரு கைகளையூம் நீட்டியபடி அவரை நெருங்கினேன்.எதற்கும் நாளைக்கு செய்தித்தாள் வாங்கிப் பாருங்கள்.                                                    ------------------------------]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>ஒரு சந்தோஷமான அறிவிப்பு</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link>
			<description><![CDATA[உருதுவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்த மாதம் 28ம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது.மொழிபெயர்த்து வெளியிட்ட திரு.முகம்மது பத்ரிக்கு நன்றி.]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>கவிதைஅதென்னமோ தெரியவில்லை... -சூர்யகுமாரன்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%85%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...+-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D</link>
			<description><![CDATA[&#039;இப்பொழுதெல்லாம்திடீர் திடீரென்றுநீகாணாமல் போய் விடுகிறாய்அறிவிக்கப்படாத மின்வெட்டு போலஅப்புறம்நம்மில் யார் சமாதானமானோம்என்றே தெரியாமல்நீயாகவே வந்து விடுகிறாய்இன்வர்ட்டர் பேட்டரி தீரும் சமயத்தில்டக்கென்று வந்து விடும்அதே பாழாய்ப் போன மின்சாரம் போல்போகப்போக இதுவூம்பழகி விடும் என்றே இருட்டில் மெழுகுவர்த்தியைஏற்றும் தருணங்களிலெல்லாம்எதிரில்உன் முகம் தெரிகிறதுஇது வெறும் பிரமையாக மட்டும்இருந்து விட வேண்டாம்&#039;]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>கணினி மற்றும் இண்டநெட்-ல் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தெளிவான   விளக்கம் கொடுக்</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+++%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE</link>
			<description><![CDATA[டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது, பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

    படம் 1

கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது...]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.</link>
			<description><![CDATA[மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு  இருக்கும் ஆனால் பல நேரங்களில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களுக்கு சென்று பங்கேற்க நேரம் இருக்காது இப்படி பல விதமான காரணங்களினால் உடல் நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் நமக்கு ஆன்லைன் மூலம் உடல் நலம் பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான்  இந்தப்பதிவு.

    படம் 1

அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான காரணங்களுக்கு பதில்
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது...]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>வாழ்க காதலிகள்...வாழ்க காதலர் தினம்...</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...</link>
			<description><![CDATA[. 

 அவனவன் வாழ்த்து 
அட்டையோடையும், ரோசாப்பூவோடையும் மந்திரிச்சூட்ட கோழி மாதிரி ஊரெல்லாந் 
திரியரானுங்க.....நம்மாளு என்னடான்னா போன் அடிச்சா எடுக்கவே 
மாட்டீங்கறாளே... ....


 நேத்து ரொம்ப பேசிப் போட்டமோ? என்ன கெரகமோ? சரி கடைசியா ஒரு தடவை முயற்சி செய்வோம்.........
 ட்ரிங்.....ட்ரிங்......ட்ரிங்.....ட்ரிங்.....ட்ரிங்........  அவள்: அலோவ்..........  அவன்: அலோவ்....ஏண்டி செல்லம் இவ்வளவு நேரமா]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item><item>
			<title>சென்னைக்கு வெண்ணை... கோவைக்கு சுண்ணாம்பு</title>
			<link>http://www.valaicharam.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88...+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link>
			<description><![CDATA[கோவையில் எங்கு பார்த்தாலும் ஒரே சோகமயம். மக்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்புகிறார்கள். யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் கொண்டவர்கள் கோவை மக்கள். அவர்களையே கதறவிட்டிருக்கிறார் மாண்புமிகு கருணையுள்ளம் கொண்ட அம்மா! எட்டு மணிநேர மின்வெட்டு பலரையும் தற்கொலையை பற்றியெல்லாம் பேசவைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரமான கோவையில் ஒரேவாரத்தில் பல ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது இந்த தொடர் மின்வெட்டு!  (கொடீசியா தலைவர் கந்தசாமி சொன்ன தகவல்படி முதல் மூன்றுநாளில் 1550கோடிக்கு நஷ்டமாம்! பத்துநாட்களில் எவ்வளவு ஆகியிருக்கும் தெரியவில்லை)சென்ற ஆட்சியில் நான்குமணிநேர மின்வெட்டுக்கு எதிராக பொங்கியெழுந்த கோவை மக்கள், இப்போது அதைக்கூட சகித்துக்கொள்ள தயாராகிவிட்டனர். எங்களுக்கு முன்னாடிமாதிரியே நாலுமண்ணேரம் கட்பண்ணிகிட்டா கூட பரவால்ல! இந்த மின்வெட்டை தாங்கமுடியல என கண்ணீர் வடிக்கின்றனர்.2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்கு வங்கியை மடைமாற்றி விட்ட பெருமை மின்வெட்டுக்கு மட்டுமேயுண்டு. ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டுக்கு குட்பை சொல்வேன்! இனி 24மணிநேர தடையில்லா மின்சாரம்! கரண்ட்டு குஜராத்துலருந்து வருது.. ஜப்பான்லருந்து வருது.. வருது வருது விலகு விலகு  என்றெல்லாம் பீலா விட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெவின் அரசு, நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு நேரத்தை எட்டுமணிநேரமாக்கியிருக்கிறுக்கிருப்பதே எட்டுமாத அதிமுக ஆட்சியின் மகத்தான சாதனை!. கலைஞர் கொண்டுவந்த திட்டங்களிலேயே இந்த மின்வெட்டு திட்டத்தை மட்டும்தான் ஆளும் ஆரசு சிறப்பாக அதிக அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது!திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக அம்மா ஆதரவு மாவட்டமாக மாறிப்போயிருந்த கோவையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது இந்த முட்டாள்த்தனமான மின்வெட்டு. கோவையின் வீதிகளில் ஜெவை வசைமாறி பொழிகின்றனர். ஆபாச வார்த்தைகளை உதிர்க்கின்றனர். கோவை மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மாணவர்கள் படிக்கமுடியாமல் தெருவில் இறங்கி போராடுகின்றனர். புலியகுளத்திலும்,பீளமேட்டிலும் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபடுகின்றனர்.கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்க நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. முதலாளி தொழிலாளி வித்தியாசமில்லாமல் காந்திபுரத்தில் பதினைந்தாயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். பிரிகால் மாதிரியான பெரிய கம்பெனிகளுக்கு பிரச்சனையில்லை! மிகச்சிறிய பணிமனைகள் வைத்திருக்கிறவர்களுக்குதான் மரண அடி! ஆட்சி மாற்றம் அனைத்தையும் மாற்றும் என நம்பியவர்களுக்கு பட்டைநாமம் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசம். தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல்! (அதாவது பத்து லட்சம் குடும்பங்கள்) இந்த மின்வெட்டு ஒட்டுமொத்தமாக இந்த தொழில்களை நேரடியாக பாதித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பகலில் ஆறுமணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் பகலில் வேலை பார்க்க முடியாமல் பாதிக்கூலியை பெருகிற நிலை உருவாகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிடும் என்கிற நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி தொழில் தொடங்கிய இளைஞர்கள் பலரும் கடனை கட்டவழியில்லாமல் தற்கொலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஒருவித சுடுகாட்டு மனநிலையில் கடும் மன உளைச்சலில் கோவைவாசிகள் இருப்பதை இரண்டுநாள் பயணத்திலேயே உணர முடிந்தது.கோவையை சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் மோசம் எப்போதாவதுதான் மின்சாரம் வருவதால் எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பதையே சரியாக சொல்லமுடியாது. இது விவசாயத்தையும் பாதித்துள்ளது. விவசாயம் நலிந்துபோய் விசைத்தறி ஓட்டுகிறவர்களுக்கும் பாதிப்பு! கிட்டதட்ட கோவையில் தொழில் செய்கிற யாருமே இந்த மின்வெட்டுக்கு தப்பவேயில்லை. மேட்டூர் அணையிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வரவில்லை என்பதால் இந்த நிலை என்கின்றனர் கோவை மின்ஊழியர்கள்! மேட்டூர் பிரச்சனை கோவைக்கு சரி! தமிழ்நாடு முழுக்கவே இந்த மின்வெட்டு தலைவிரித்தாடுகிறதே! எப்போது கேட்டாலும் 2500 மெகாவாட் பற்றாக்குறை என பஜனை பாடுவதை நம் மின்சாரத்துறையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது.கோவை முழுக்கவே ஒரே குரலில் ‘’தயவுசெஞ்சு எவன் செத்தாலும் பரவால்ல கூடங்குளத்தை திறந்து எங்களுக்கு கரண்ட்டு குடுங்க’’ என மக்கள் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறார்கள். அதிகாரம் எதை எதிர்பார்த்து கோவையின் ஃப்யூஸைப்புடுங்கியதோ அது நிறைவேறிவிட்டதாகவே நினைக்கலாம்! கூடங்குளத்துக்கு மக்கள் ஆதரவை பெருக்க மிகச்சிறந்த வழியை மத்திய அரசு கண்டுபிடித்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதோடு தமிகழகத்தில் மின் உற்பத்தி செய்கிற பிபிஎன்,சாமல்பட்டி,மதுரைபவர் கார்ப்,ஜிஎம்ஆர் வாசவி உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. காரணம்? மின்வாரியம் தரவேண்டிய சொற்பமான நிலுவைத்தொகையை தரவில்லையாம்! அதை தரும்வரை உற்பத்தி கிடையாது என முரண்டுபிடிக்கின்றன. பிபிஎன் நிறுவனத்தோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி உற்பத்தி பண்ணினாலும் பண்ணாட்டியும் அந்நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒருகோடிரூபாயை தமிழக அரசு தண்டமாக கொடுத்தேதீரவேண்டுமாம். இந்த மின்வெட்டில் சென்னையின் பங்கு கணிசமானது. சென்னைக்கு மட்டுமே ஒருநாளைக்கு 3500மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவைக்கு வெறும் பிச்சாத்து ஆயிரம் மெகாவாட்தான்! அந்த ஆயிரத்தை கூட ஒழுங்காக கொடுக்கமுடியாமல் 300மெகாவாட்டுக்கு தட்டேந்தி திரிகிறது மின்சாரவாரியம். சென்னைக்கு ஒருமணிநேரம்தான் கரண்ட் கட். அதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்டம்போடுகிற ஸ்ரீபெரும்புதூர் மாதிரியான பகுதிகளில் அந்த ஒருமணிநேரமும் கூட கிடையாது என்றே நினைக்கிறேன்! சென்னையில் கூடுதலாக இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினாலும் கூட கோவையை வாழவைக்க முடியும் என்கின்றனர் சிலர். என்னைக்கேட்டால் சென்னையிலும் எட்டுமணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினால் மட்டும்தான் ஆளும் வர்க்கத்துக்கு இந்த மின்வெட்டின் உண்மையான பிரச்சனை புரியும். அப்படி செய்யாத வரை யாருக்கும் இதன் பாதிப்பு தெரியவே போவதில்லை.]]></description>
			<pubDate>Sat, 18 Feb 2012 15:00:04 MST</pubDate>
			</item></channel> 
	                </rss>
